இந்தியா (National)

நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை- உயர் கல்வித்துறை செயலாளர் விளக்கம்

Published On 2024-06-08 09:16 GMT   |   Update On 2024-06-08 09:28 GMT
  • 6 தேர்வு மையங்களில்தான் பிரச்னை நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
  • விசாரணை அறிக்கை ஒரு வார காலத்திற்குள் கிடைக்கும் என நம்புகிறோம்.

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை இயக்குனர் ஜெனரல் சுபோத் குமார் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு முடிவுகள் வெளிப்படை தன்மையுடன் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு தொடங்கி 2 மணி நேரத்திற்கு பிறகு தான் வினாத்தாள்கள் லீக் ஆகியுள்ளது.

நீட் தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. எங்கள் தரப்பில் இருந்து வினாத்தாள் கசிந்திருக்க எந்த வாய்ப்பும் இல்லை.

முறைகேடு புகார்கள் தொடர்பாக கமிட்டி அமைத்து ஆராய்ந்தோம். எங்கள் குழு ஆய்வு செய்தவரை தேர்வு நடைமுறையில் எந்த தவறும் இல்லை. நீட் தேர்வு புகார்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

6 தேர்வு மையங்களில்தான் பிரச்னை நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்கள் இல்லை. தவறான வினாத்தாள் காரணமாக 1600 பேருக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது.

விசாரணை அறிக்கை ஒரு வார காலத்திற்குள் கிடைக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News