இந்தியா

மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியாவின் தாயார் காலமானார்

Published On 2024-05-15 07:49 GMT   |   Update On 2024-05-15 07:49 GMT
  • நிமோனியாவால் அவதிப்பட்ட மாதவி ராஜே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
  • இன்று காலை 9.28 மணிக்கு மாதவி ராஜே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுடெல்லி:

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா.

நிமோனியாவால் அவதிப்பட்டு வந்த மாதவி ராஜே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்த மாதவி ராஜே இன்று காலை 9.28 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் குவாலியரில் நடைபெற உள்ளன.

மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியாவின் தாயார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மாதவி ராஜே சிந்தியா பல்வேறு தொண்டு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News