இந்தியா

உத்தரபிரதேசத்தில் நர்ஸ் கற்பழித்து படுகொலை

Published On 2024-08-16 05:24 GMT   |   Update On 2024-08-16 05:24 GMT
  • மாயமான நர்சை கண்டுபிடித்து தருமாறு அவரது சகோதரி போலீசில் புகார் செய்தார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிலாஸ்பூர்:

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய நர்சு ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் திப்திபா கிராமத்தை சேர்ந்த 30 வயதான நர்சு ஒருவர் தனது 11 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார்.

கடந்த 30-ந் தேதி மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட நர்ஸ் மறுநாள் வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் நர்சை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே மாயமான நர்சை கண்டுபிடித்து தருமாறு அவரது சகோதரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் ருத்ராப்பூரின் இந்திராசவுக் பகுதியில் இ-ரிக்சாவில் ஏறும் காட்சி கடைசியாக சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் கடந்த 8-ந் தேதி அந்த நர்சின் வீட்டில் இருந்து 1½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காலிமனைப்பகுதியில் நர்ஸ் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

அவரது செல்போன் மற்றும் மணிபர்ஸ் ஆகியவை திருட்டு போய் இருந்தது. நர்சின் செல்போன் எண் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் பரேலியை சேர்ந்த தர்மேந்திரகுமார் என்ற தொழிலாளி அந்த நர்சை கற்பழித்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்ட்டது.

கடந்த 30-ந் தேதி நர்சு ஆஸ்பத்திரியில் பணி முடிந்து தனியாக வீட்டிற்கு சென்ற போது தர்மேந்திரகுமார் அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளார். பின்னர் நர்சை தாக்கி புதருக்குள் இழுத்து சென்று கற்பழித்த அவர் நர்சின் கைக்குட்டையாலேயே மூச்சு திணற செய்து கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ராஜஸ்தானில் பதுங்கி இருந்த தர்மேந்திரகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் நர்சிடம் இருந்து அவர் திருடி இருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான தர்மேந்திரகுமார் போதைக்கு அடிமையானவர் என்றும் அவர் நர்சை கழுத்தை நெரித்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News