புதுச்சேரி

கனமழை- புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Published On 2024-10-19 02:09 GMT   |   Update On 2024-10-19 04:15 GMT
  • இன்று அதிகாலை 4 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
  • சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

புதுச்சேரி:

புதுவையில் பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

ஆனால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. லேசான மழை மட்டும் பெய்தது. காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திராவுக்கு நகர்ந்தது.

இதையடுத்து மீண்டும் புதுவையில் வெயில் அடித்தது. ஆனால் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்டது.

பகல் பொழுது முழுவதும் இதே நிலை நீடித்தது. அவ்வப்போது லேசான சாரல் பெய்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதிகாலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரியளவில் பாதிப்பு இல்லை. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்தார்.

அதே நேரத்தில் 7 மணிக்கு மேல் மழை படிப்படியாக குறைந்தது. இருப்பினும் வானம் மேக மூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற நிலை தொடர்கிறது.

Tags:    

Similar News