கிரிக்கெட் (Cricket)

டோனி தான் காரணம்.. அமித் மிஸ்ரா பகீர் தகவல்

Published On 2024-08-16 14:54 GMT   |   Update On 2024-08-16 14:54 GMT
  • டோனியின் முடிவை எதிர்த்து என்னால் எதுவும் பேச முடியவில்லை.
  • நிர்வாகத்திடம் பேசினால் கூட டோனியிடமே வாய்ப்பு கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அமித் மிஸ்ரா கடந்த 2003-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2016-ம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் விளையாடியிருந்தாலும் 22 டெஸ்ட் போட்டிகள், 36 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

இந்நிலையில் தனது கிரிக்கெட் கரியரில் அதிக வாய்ப்புகளை பெற முடியாமல் போனதற்கு காரணமே முன்னாள் கேப்டன்களான டோனி மற்றும் விராட் கோலி போன்ற கேப்டன்கள் செய்த செயல் தான் என அமித் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்திய அணிகள் நான் தொடர்ந்து விளையாட முடியாதது ஏன் என்று டோனியிடம் கேட்டபோது : அவர் அணியின் காம்பினேஷனில் நான் பொருந்தவில்லை என்று கூறினார். மேலும் நான் விளையாட வாய்ப்பு கேட்டபோது காம்பினேஷனுக்கு செட் ஆகவில்லை என்றால் ஓய்வு வழங்கப்படும் என்றுதான் கூறினார். டோனியின் முடிவை எதிர்த்து என்னால் எதுவும் பேச முடியவில்லை. நிர்வாகத்திடம் பேசினால் கூட டோனியிடமே வாய்ப்பு கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

அதேபோன்று 2016-ம் ஆண்டு நான் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த போது கோலி தான் என்னை ஆதரித்தார். ஆனாலும் நான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அவரும் என்னை அணியில் இருந்து நீக்கினார். அப்போது விராட் கோலி என்னிடம் வந்து அவருடன் பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் நான் அதிக எடையை தூக்கி பயிற்சி செய்ய முடியாது என்று கூறினேன்.

அதன் பின்னர் கோலியும் என்னை அணியிலிருந்து நீக்கிவிட்டு எனக்கு தெளிவான பதிலை கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் நானே அவருக்கு மெசேஜ் அனுப்பி வாய்ப்பு கேட்டேன். ஆனாலும் அவர் சரியான பதிலை அளிக்கவில்லை.

இவ்வாறு மிஸ்ரா கூறினார்.

Tags:    

Similar News