கிரிக்கெட்

கோலியை விட ரோகித் வேற லெவல்- பாக். முன்னாள் வீரர் புகழாரம்

Published On 2024-09-11 09:24 GMT   |   Update On 2024-09-11 09:24 GMT
  • விராட் கோலியை நான் பெரிதும் மதிக்கிறேன்.
  • ஒரு பந்துவீச்சாளராக இருக்கும் போது விராட் கோலியை விட ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேனாக தெரிகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக பார்க்கப்படுகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை இவர்கள் இருவரும் வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மரியாதையை பெற்று வருகின்றனர்.

அதேபோன்று தற்போது இருவருமே 35 வயதை கடந்த நிலையில் இன்றளவும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புவதாக கூறி தற்போது இந்திய அணியில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலியை விட ரோகித் சர்மாவின் பேட்டிங் டைமிங் சிறந்ததாக இருக்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் கான் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது:-

விராட் கோலியை நான் பெரிதும் மதிக்கிறேன். ஏனென்றால் அவர் மிகப்பெரிய பேட்ஸ்மேன். ஆனால் ஒரு பந்துவீச்சாளராக இருக்கும் போது விராட் கோலியை விட ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேனாக தெரிகிறார். ஏனெனில் உலகில் எந்த ஒரு பேட்ஸ்மேனை விட ரோகித் சர்மாவிடம் நல்ல டெக்னிக் இருக்கிறது. விராட் கோலி தன்னுடைய உடற்தகுதியை வைத்து ரன்களை குவிக்கிறார்.

அதாவது ஒரு ரன் எடுத்தால் மீண்டும் மற்றொரு ரன் ஓட அவர் எப்பொழுதுமே தயாராக இருப்பார். ஆனால் ரோகித் அப்படி கிடையாது ஒரு ரன் அடித்து விட்டால் அதற்கு அடுத்து பந்துவீச்சாளரை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை குவிப்பார். என்னை பொறுத்தவரை விராட் கோலியை விட டைமிங் செய்வதில் ரோகித் சர்மா சிறந்தவர்.

என சோஹைல் கான் கூறினார்.

Tags:    

Similar News