விளையாட்டு
யு.எஸ் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்திய வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
- அமெரிக்காவின் டெக்சாசில் யு.எஸ். ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது.
- இதில் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி அடைந்தார்.
டெக்சாஸ்:
அமெரிக்காவின் டெக்சாசில் யு.எஸ். ஓபன் பேட்மிண்ட்ன் தொடர் நடைபெறுகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஜப்பான் வீராங்கனை நட்சுகி நிடைரா உடன் மோதினார்.
இதில் மாளவிகா 16-21, 13-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்தப் போட்டி சுமார் 43 நிமிடங்கள் நடந்தது.