டென்னிஸ்

வூஹான் ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ஜெங் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Published On 2024-10-12 22:30 GMT   |   Update On 2024-10-12 22:30 GMT
  • வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
  • இதில் பெலாரஸ் வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பீஜிங்:

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை கோகோ காப் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 1-6 என இந்த சபலென்கா அடுத்த இரு சுற்றுகளை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங், சகநாட்டு வீராங்கனை வாங் சின்யு உடன் மோதினார். இதில் ஜெங் 6-3, 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சபலென்கா, ஜெங்கை எதிர்கொள்கிறார்.

Tags:    

Similar News