செய்திகள்
டீசல் விலை அதிகரிப்பால் லாரி தண்ணீர் கட்டணம் ரூ.475 ஆக உயர்வு
டீசல் விலை உயர்வு காரணமாக சென்னையில் லாரி தண்ணீர் கட்டணம் கடந்த 21-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு விற்கப்படும் லாரி தண்ணீர் விலை 5 சதவீதம் அதிகமாகி உள்ளது.
சென்னை:
டீசல் விலை உயர்வு காரணமாக சென்னையில் லாரி தண்ணீர் கட்டணம் கடந்த 21-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் லாரிகள் மூலம் இலவசமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டாலும் வீடு, நிறுவனங்களுக்கு குடிநீர் வாரியத்தில் பதிவு செய்தால் தனியாக லாரி தண்ணீர் அனுப்பும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மினி லாரி தண்ணீர் ரூ.400-க்கு விற்கப்பட்டது. இப்போது இதன் விலை ரூ.475 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் ரூ.510-ல் இருந்து ரூ. 700 ஆக உயர்ந்துள்ளது.
9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி தண்ணீர் ரூ.600-ல் இருந்து ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு ரு.765-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது.
16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி தண்ணீர் ரூ. 1070-ல் இருந்து விலை உயர்த்தப்பட்டு ரூ.1200-க்கு விற்கப்படுகிறது. நிறுவனங்களுக்கு வழங்கப்படும் லாரி தண்ணீர் ரூ.1360-ல் இருந்து ரூ.1700 ஆக உயர்ந்துள்ளது.
இதுபற்றி சென்னை குடிநீர் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. பல்வேறு கால கட்டங்களில் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதால் கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளோம்.
வீடுகளுக்கு விற்கப்படும் லாரி தண்ணீர் விலை 5 சதவீதம் அதிகமாகி உள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விற்கப்படும் தண்ணீர் விலை 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Diesel
டீசல் விலை உயர்வு காரணமாக சென்னையில் லாரி தண்ணீர் கட்டணம் கடந்த 21-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் லாரிகள் மூலம் இலவசமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டாலும் வீடு, நிறுவனங்களுக்கு குடிநீர் வாரியத்தில் பதிவு செய்தால் தனியாக லாரி தண்ணீர் அனுப்பும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மினி லாரி தண்ணீர் ரூ.400-க்கு விற்கப்பட்டது. இப்போது இதன் விலை ரூ.475 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் ரூ.510-ல் இருந்து ரூ. 700 ஆக உயர்ந்துள்ளது.
9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி தண்ணீர் ரூ.600-ல் இருந்து ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு ரு.765-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது.
16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி தண்ணீர் ரூ. 1070-ல் இருந்து விலை உயர்த்தப்பட்டு ரூ.1200-க்கு விற்கப்படுகிறது. நிறுவனங்களுக்கு வழங்கப்படும் லாரி தண்ணீர் ரூ.1360-ல் இருந்து ரூ.1700 ஆக உயர்ந்துள்ளது.
இதுபற்றி சென்னை குடிநீர் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. பல்வேறு கால கட்டங்களில் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதால் கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளோம்.
வீடுகளுக்கு விற்கப்படும் லாரி தண்ணீர் விலை 5 சதவீதம் அதிகமாகி உள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விற்கப்படும் தண்ணீர் விலை 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Diesel