செய்திகள்

கலர் டி.வி. ஊழல் வழக்கு- முன்னாள் அமைச்சர் செல்வகணபதி விடுதலை

Published On 2018-07-31 09:58 GMT   |   Update On 2018-07-31 09:58 GMT
உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலர் டி.வி. கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உட்பட 3 பேரை விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

முன்னாள் அமைச்சர் செல்வகணபதி. இவர் 1991-96-ம் ஆண்டு வரை உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலர் டி.வி. கொள்முதல் செய்ததில் ரூ.83.25 லட்சம் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக செல்வகணபதி உள்பட 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில் செல்வகணபதி உள்ளிட்டோரை விடுதலை செய்து 2009-ம் ஆண்டு சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து சி.பி.ஐ. சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

கீழ்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து செல்வகணபதி உள்பட 3 பேரை விடுதலை செய்து சி.பி.ஐ. அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது.
Tags:    

Similar News