செய்திகள்

‘பேஸ்புக்’ நட்பால் விபரீதம்- ஆசிரியையை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர்

Published On 2018-11-08 12:14 GMT   |   Update On 2018-11-08 12:14 GMT
கோவையில் அரசு பள்ளி ஆசிரியரை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
கோவை:

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராஜபிரவீன் (வயது 25). பட்டதாரி.

இவருக்கு சமூகவலைதளமான ‘பேஸ்புக்’ மூலமாக கோவை சிங்காநல்லூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த ஆசிரியையிடம் ராஜபிரவீன் நட்பாக பேசி பழகினார்.

அப்போது நான் குரூப்-2 தேர்வு எழுத உள்ளேன், அதற்கு பணம் தேவைப்படுகிறது என ராஜ பிரவீன் கேட்டுள்ளார்.அதற்கு ஆசிரியை நான் உனக்கு உதவி செய்கிறேன் என கூறினார்.

இதையடுத்து ராஜபிரவீன் கோவை வந்து ஆசிரியையை சந்தித்து பேசினார். அப்போது ராஜபிரவீனுக்கு ஆசிரியை ரூ.38 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் காசோலைகளை கொடுத்தார். பின்னர் ஆசிரியையை ஓட்டலுக்கு அழைத்து சென்ற ராஜபிரவீன் தண்ணீரில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் ஆசிரியை மயங்கியதும் அறைக்கு அழைத்து சென்று பலவந்தப்படுத்தி உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும், ஆசிரியையை ஆபாசமாக வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோவை காட்டி மேலும் 3 முறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜபிரவீன் ஆசிரியையை திருமணம் செய்ய வேண்டுமானால் ரூ.2 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு ஆசிரியை மறுத்துள்ளார். எனினும் ராஜபிரவீன் நைசாக பேசி ஆசிரியையிடம் இருந்து 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை வாங்கி சென்று தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆசிரியை சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜபிரவின் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News