செய்திகள் (Tamil News)

குனியமுத்தூரில் சிறுமி பாலியல் பலாத்காரம்- வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

Published On 2018-12-22 14:52 GMT   |   Update On 2018-12-22 14:52 GMT
கோவை குனியமுத்தூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

கோவை:

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தை சேர்ந்த 16 வயது சிறுமியுடன், ரியாஸ் என்ற வாலிபர் நண்பராக பழகியுள்ளார். கடந்த 7-ந் தேதி சுந்தராபுரம் அருகே உள்ள முத்தையா நகர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு ரியாஸ், சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து அந்த சிறுமி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ரியாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News