செய்திகள் (Tamil News)
பா.ஜனதாவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் - பிரகாஷ் காரத் ஆவேசம்
அரசியலமைப்பு சட்டத்தை சீரழிக்கும் பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று பிரகாஷ் காரத் ஆவேச மாக பேசினார். #PrakashKarat
மதுரை:
மதுரை பழங்காநத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியதாவது:-
பிரதமர் மோடி நாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்து வருகிறார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நாட்டை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பன்முக தன்மை கொண்ட இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி செய்கிறார். இந்த தேர்தல் மூலம் பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.
மோடி கடந்த தேர்தலின் அளித்த போது வாக்குறுதிகள் அம்பலப்பட்டு நிற்கின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவித்தார். அவர்களது ஆட்சியின் சொந்த புள்ளி விரவமே அதனை பொய்யாக்குகிறது.
45 ஆண்டுகள் இல்லாத வகையில் வேலை வாய்ப்பு பறிபோய் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 11 கோடி பேரின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.
பண மதிப்பிழப்பு அறிவிப்பால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விவசாயிகளின் வருமானம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க. வோடு சேர்ந்து பாரதிய ஜனதா மோசமான கூட்டணியை அமைத்துள்ளது. அதில், அ.தி.மு.க. அடிமையாக உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை தோற்கடித்து தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
மேற்கண்டவாறு அவர் பேசினார். #tamilnews
மதுரை பழங்காநத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியதாவது:-
பிரதமர் மோடி நாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்து வருகிறார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நாட்டை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பன்முக தன்மை கொண்ட இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி செய்கிறார். இந்த தேர்தல் மூலம் பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.
மோடி கடந்த தேர்தலின் அளித்த போது வாக்குறுதிகள் அம்பலப்பட்டு நிற்கின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவித்தார். அவர்களது ஆட்சியின் சொந்த புள்ளி விரவமே அதனை பொய்யாக்குகிறது.
45 ஆண்டுகள் இல்லாத வகையில் வேலை வாய்ப்பு பறிபோய் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 11 கோடி பேரின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.
பண மதிப்பிழப்பு அறிவிப்பால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விவசாயிகளின் வருமானம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க. வோடு சேர்ந்து பாரதிய ஜனதா மோசமான கூட்டணியை அமைத்துள்ளது. அதில், அ.தி.மு.க. அடிமையாக உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை தோற்கடித்து தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
மேற்கண்டவாறு அவர் பேசினார். #tamilnews