தமிழ்நாடு (Tamil Nadu)

சிறந்த கைவினைஞர்களுக்கு விருது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Published On 2024-07-16 09:26 GMT   |   Update On 2024-07-16 09:26 GMT
  • 8 விருதாளர்களுக்கு முதலமைச்சர் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
  • 10 விருதாளர்களுக்கு முதலமைச்சர் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

சென்னை:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 8 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் வழங்கி கவுரவித்தார்.

'2022-23ஆம் ஆண்டிற்கான "வாழும் கைவினைப் பொக்கிஷம்'' விருதுகளை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ந. பாலகிருஷ்ணன் மற்றும் கே.பி. உமாபதி (பித்தளை கலைப்பொருட் கள்), சா. ராஜகோபால் (சுடு களிமண்), ந.மணி ஆச்சாரி (கற்சிற்பம்), சி. முத்துசுவாமி ஆச்சாரி (கோவில் நகைகள்), சு. கோவிந்தராஜ் (இசைக்கருவி), ப. சுலைகாள் பீவி (கோரைப் பாய் நெசவு) செ. தங்கஜோதி (இயற்கை நார்பொருட்கள்) ஆகிய 8 விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

"2022-23ஆம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை - சி. ரவி ச. நாகலெட்சுமி, மா. ராஜப்பா (தஞ்சாவூர் ஓவியம்), ம. முருகேசன் (இசைக்கருவி), ரா. லோகநாதன் (தஞ்சாவூர் கலைத்தட்டு), ந. பூவம்மாள் (சித்திரத் தையல்), திரு. ப. வரதன் (கற்சிற்பம்), மு. ராஜரத்தினம் மற்றும் ரா. சக்திவேல் (மரச்சிற்பம்), செ. லில்லி மேரி (மூங்கில் பாய் ஓவியம்) ஆகிய 10 விருதாளர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News