தமிழ்நாடு (Tamil Nadu)
பிற மாநில போலீசாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்- மு.க.ஸ்டாலின்
- கடந்தாண்டு மட்டும் இணையவழி குற்றங்கள் தொடர்பாக 1390 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
சென்னை கிண்டியில் தென்பிராந்திய காவல் துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கடந்தாண்டு மட்டும் இணையவழி குற்றங்கள் தொடர்பாக 1390 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* போதைப்பொருள் கடத்தல், சைபர் கிரைம், வலைதளங்களில் வதந்திகளை தடுக்க பிற மாநில போலீசாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
* இணையவழி குற்றவாளிகள் பெரும்பாலும் பிற மாநிலங்கள், பிற நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் இணைந்து செயல்படுவது அவசியம்.
* சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
* சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட இணையத்தில் பரவும் வதந்திகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.