தமிழ்நாடு

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு

Published On 2024-09-09 16:08 GMT   |   Update On 2024-09-09 16:08 GMT
  • வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
  • மகாவிஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.

இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இரு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவமதித்தல், வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

செப்டம்பர் 20 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் மகாவிஷ்ணுவை ஐந்து நாட்கள் விசாரிக்க அனுமதி அளிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து விசாாரணை நடத்தி வரும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அசோக் நகர் அரசு பள்ளியில் ஆசிரியர்களிடம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர். இதோடு, அந்த பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசியிடம் கண்ணப்பன் தொலைபேசியில் விசாரணை நடத்தினார்.

அப்போது, "மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யார்? அனுமதி வழங்கியது யார்?" என்ற இரண்டு கேள்விகளுக்கும் நாளைக்குள் எழுத்துப்பூர்வமான பதில் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

Similar News