தமிழ்நாடு (Tamil Nadu)

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4.56 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Published On 2024-08-13 10:26 GMT   |   Update On 2024-08-13 10:37 GMT
  • கார் மூலம் கடத்தல் தங்கம் கொண்டு செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
  • இரண்டு பேரை கைது செய்ததுடன் 6.6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 6.60 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்ததுடன், கடத்தி வந்தவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இலங்கையில் இருந்து கடத்தல் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி திருப்பாச்சேத்தி டோல்கேட் பகுதியில் சோதனை நடத்தினர்.

இந்த தீவிர சோதனையில் சந்தேக விதமாக வந்த காரை நிறுத்தியதில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ 600 கிராம் மதிப்பிலான கடத்தல் தங்கம் இருப்பதை கண்டறிந்தனர். அதன் மதிப்பு ரூ.4.56 கோடி ரூபாய். உடனே தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News