தமிழ்நாடு (Tamil Nadu)

பா.ஜ.க. மேடையில் 'கை' சின்னத்துக்கு ஓட்டு கேட்ட நிர்வாகியால் பரபரப்பு

Published On 2024-03-18 08:51 GMT   |   Update On 2024-03-18 09:33 GMT
  • வேலூர் இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
  • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைத்த அத்திப்பட்டு துரைக்கண்ணு கண்டன உரையாற்றினார்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டித்தும், அதை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைத்த அத்திப்பட்டு துரைக்கண்ணு கண்டன உரையாற்றினார்.

பா.ஜ.க.வின் சாதனைகள் பற்றி பேசிய அத்திப்பட்டு துரைக்கண்ணு இதுபோன்ற திட்டங்களை செய்திருக்கின்ற பிரதமர் மோடிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் "கை" சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பேசினார்.


பா.ஜ.க. ஆர்ப்பாட்ட மேடையில் நின்றபடி காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் சிறிது நேரம் சலசலப்பும், சிரிப்பலையும் எழுந்தது. உடனே சுதாரித்த அத்திப்பட்டு துரைக்கண்ணு நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் பழக்க தோஷத்தில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு விட்டதாகவும், தன்னை மன்னித்து விடுங்கள் எனவும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் கேட்டு கொண்டார்.

பா.ஜ.க. மேடையில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்ட அத்திப்பட்டு துரைக்கண்ணு அதனை தொடர்ந்து பேசும் போது அருகில் நின்றிருந்த பா.ஜ.க. நிர்வாகிகள் தாமரை சின்னம் என பேசுமாறு எடுத்து கொடுத்தனர். பா.ஜ.க. மேடையில் மோடிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News