மக்களவை தேர்தல் தோல்வியால் விரக்தியில் அதிமுக - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மீண்டும் மீண்டும் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் அ.தி.மு.க. செயல்படுகிறது.
- ஆர்ப்பாட்டம் செய்ய எல்லா கட்சிகளுக்கும் இடமும், உரிமையும் உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் உத்தரவை அடுத்து அவைக் காவலர்கள் அ.தி.மு.க. வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றினர்.
இதன்பின், சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
* அவை கூடியதும் தேவையற்ற பிரச்சனைகளை அ.தி.மு.க.வினர் கிளப்புகின்றனர்.
* கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கடந்த 20-ந்தேதி சபையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
* வேண்டுமென்றே திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அ.தி.மு.க.வினர் முயற்சி.
* மீண்டும் மீண்டும் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் அ.தி.மு.க. செயல்படுகிறது.
* மக்களவை தேர்தல் தோல்வியால் அதிமுக விரக்தியில் செயல்படுகிறது.
* கள்ளக்குறிச்சி சம்பவத்தின் உண்மையை அறிய நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
* கள்ளக்குறிச்சியில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
* ஆர்ப்பாட்டம் செய்ய எல்லா கட்சிகளுக்கும் இடமும், உரிமையும் உள்ளது.
* நியாயமான ஆர்ப்பாட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்கிறது.
* இந்த விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.