தமிழ்நாடு
தொடர் விடுமுறை- நள்ளிரவில் திணறும் கொடைக்கானல்
- கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
- புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை, தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.
தமிழகத்தில் தற்போது காலாண்டு விடுமுறை, வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வருவதன் காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் இரவு நேரத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக, சுற்றுலாவை அனுபவிக்க செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.