3 மாவட்ட பாசனங்களுக்கு தண்ணீர் திறப்பால் வைகை அணை நீர்மட்டம் 12 அடி சரிந்தது
- தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் அணையின் நீர் மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.80 அடியாக உள்ளது. வரத்து 44 கன அடி. திறப்பு 100 கன அடி.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன தேவைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக இருந்தது. அப்போது ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு பூர்வீக பாசன தேவைகளுக்காக 3 கட்டங்களாக தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து இன்று காலை 47.64 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 199 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை குடிநீர் தேவைக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1498 மி.கன அடியாக உள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் அணையின் நீர் மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.80 அடியாக உள்ளது. வரத்து 44 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 2439 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடி. வரத்து 21 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து 7 கன அடி. திறப்பு 3 கன அடி.
பெரியாறில் 5.4, தேக்கடியில் 0.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.