தண்ணீர் திறப்பு குறைப்பால் 62 அடியை நெருங்கிய வைகை அணை
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.50 அடியாக உள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் முதல்போக சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்ப ட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 57 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 61.58 அடியாக உள்ளது. விரைவில் 62 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 2063 கன அடி நீர் வருகிறது. 3912 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.50 அடியாக உள்ளது. 1168 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1533 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 4590 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 184 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126.28 அடியில் உள்ளது. அணைக்கு வரும் 158 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
பெரியாறு 2.8, தேக்கடி 5.4, கூடலூர் 1.4, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 0.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.