செய்திகள் (Tamil News)
டெக்சாஸ் பள்ளியில் துப்பாக்கி சூடு - 9 மாணவர்கள் உட்பட 10 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். #TexasSchoolShooting
வாஷிங்டன்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சாண்டா பே பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் நேற்று சில மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.
இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் 9 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் அந்த பள்ளியில் பயின்றுவரும் மாணவர் எனவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், டெக்சாசில் இருந்து கிடைக்கும் தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன என பதிவிட்டுள்ளார். #TexasSchoolShooting