செய்திகள் (Tamil News)
பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத தடுப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்பு?
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷங்காய் கூட்டுறவு அமைப்பு என்ற தலைப்பில் நடைபெறும் பயங்கரவாத தடுப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #shanghai2018 #SCO2018
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷங்காய் கூட்டுறவு அமைப்பு என்ற தலைப்பில் நடைபெறும் பயங்கரவாத தடுப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #shanghai2018 #SCO2018
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவை சேர்ந்த உயர்மட்ட குழுவினர் இஸ்லாமாபாத்துக்கு வருவதாகவும், அவர்களை பாகிஸ்தானுக்கு வரவேற்பதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #shanghai2018 #SCO2018 #Pakistan #India