செய்திகள்

இந்தியாவில் இருந்து சீனாவுக்கு அரிசி ஏற்றுமதி - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம்

Published On 2018-06-09 14:42 GMT   |   Update On 2018-06-09 14:42 GMT
இந்தியாவில் இருந்து சீனாவுக்கு பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்ய குவிங்டாவ் நகரில் பிரதமர் மோடி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையொப்பமானது. #chinaindiariceexport
பீஜிங்:

இந்தியாவில் இருந்து பாசுமதி அல்லாத பிறரகத்தை சேர்ந்த அரிசி வகைகளை இறக்குமதி செய்ய சீன அரசு கடந்த 2006-ம் ஆண்டில் தடை விதித்தது. சர்வதேச தரங்களுக்கு ஏற்ப இந்திய அரிசி வகைகள் இல்லாததால் இந்த தடை விதிக்கப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில். குவிங்டாவ் நகரில் நடைபெறும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் முன்னிலையில் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்ய இன்று ஒப்பந்தம் கையொப்பமானது.

மேலும், பிரம்மபுத்திரா ஆற்றின் நீர் இருப்பு மற்றும் நீர் அழுத்தம் தொடர்பாக இந்தியா - சீனா இடையே தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் இன்று ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. #tamilnews #chinaindiariceexport
Tags:    

Similar News