செய்திகள் (Tamil News)

சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்த முயற்சி - 4 பயங்கரவாதிகளை எகிப்து போலீசார் சுட்டுக் கொன்றனர்

Published On 2018-08-25 15:08 GMT   |   Update On 2018-08-25 15:08 GMT
எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி மீது இன்று தாக்குதல் நடத்த முயன்ற நான்கு பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். #Egyptianpolice #checkpointattack
கெய்ரோ:

எகிப்து நாட்டின் சினாய் தீபகற்பம் பகுதியில் உள்ள மசூதியின் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணகானவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையை தீவிரப்படுத்துமாறு அதிபர் அப்ட்டெல்-ஃபட்டா அல்-சிசி உத்தரவிட்டார்.

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள எல்-ஆரிஷ் நகரில் இன்று போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல் நடத்த தற்கொலைப் படை பயங்கரவாதிகள் முயன்றனர். அந்த தாக்குதலை முறியடித்த போலீசார் ஆயுதங்களுடன் வந்த நான்கு பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். #Egyptianpolice #checkpointattack 
Tags:    

Similar News