செய்திகள்

கொலை வழக்கு: ஐக்கிய அரபு நாட்டில் இந்தியருக்கு 15 ஆண்டு ஜெயில்

Published On 2018-12-18 06:19 GMT   |   Update On 2018-12-18 06:19 GMT
ஐக்கிய அரபு நாட்டில் சக ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் இந்திய வாலிபருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துபாய்:

ஐக்கிய அரபு நாட்டில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த இந்தியாவை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர் சக ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது.

இது தொடர்பான வழக்கு துபாய் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வாலிபருக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News