செய்திகள்

பெரு நாட்டில் ஓட்டல் மீது பனிப்புயல் தாக்கியதில் 15 பேர் உயிரிழப்பு

Published On 2019-01-27 14:44 GMT   |   Update On 2019-01-27 15:15 GMT
பெரு நாட்டின் வடகிழக்கு பகுதியில் வீசிய பனிப்புயல் ஓட்டல் சுவரை தாக்கி உடைத்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #15dead #mudslideinPeru
லிமா:

பெரு நாட்டின் வடகிழக்கு பகுதியில் பலத்த பனிப்புயல் வீசி வருகிறது. இந்நிலையில் அபுரிமாக் பகுதிக்குட்பட்ட அபன்கே நகரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் இன்று ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர்.

அப்போது, பனிப்புயலின் வேகத்தால் அருகாமையில் இருந்த பாறைகள்  மற்றும் மண்கட்டிகள் அந்த ஓட்டல் சுவற்றின் மீது பலமாக மோதின. 

இதனால் ஓட்டலின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும் 30-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் அபன்கே நகர மேயர் எவரிஸ்ட்டோ ரமோஸ் தெரிவித்துள்ளார். #15dead #mudslideinPeru  
Tags:    

Similar News