செய்திகள்

காக்களூர் தட்சணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

Published On 2018-10-05 08:05 GMT   |   Update On 2018-10-05 08:05 GMT
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஸ்ரீயோகா ஞான தட்ணாமூர்த்தி கோவிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
குரு பகவான் நேற்று இரவு 10.05 மணி அளவில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ந்தார்.

இதையொட்டி திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஸ்ரீயோகா ஞான தட்ணாமூர்த்தி கோவிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவிலில் 8 மணிக்கு துர்கா ஹோமம், காளி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தட்சணாமூர்த்தி மூலமந்திரம் ஹோமம், ஸ்ரீயோகஞான தட்சணாமூர்த்தி அஸ்த்ர ஹோமம் நடந்தது.

தொடர்ந்து தட்சணா மூர்த்திக்கு 108 லிட்டர் பால்குட அபிஷேகம் நடைபெற்றது. சரியாக இரவு 10.05 மணிக்கு குரு பெயர்ச்சி அடையும் நேரத்தில் மகா தீபாராதனை நடந்தது.

இதில், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் பரிகார மகா யாகத்தில் கலந்து கொண்டனர். இதில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகார ஹோமங்கள் நடத்தப்பட்டது.
Tags:    

Similar News