செய்திகள்
தெப்போற்சவம் நடைபெறும் ஸ்ரீவாரி புஷ்கரணியை படத்தில் காணலாம்.

திருப்பதியில் தெப்போற்சவம் இன்று தொடக்கம்

Published On 2019-03-16 08:07 GMT   |   Update On 2019-03-16 08:07 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5 நாட்கள் நடைபெறும் வருடாந்திர தெப்போற்சவம் இன்று இரவு (சனிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை நடக்கிறது.
சர்வ ஜெகத்ரட்சகரான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5 நாட்கள் நடைபெறும் வருடாந்திர தெப்போற்சவம் இன்று இரவு (சனிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை நடக்கிறது.

இன்று உற்சவர்களான சீதா, ராமச்சந்திரமூர்த்தி, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ருக்மணி, ஸ்ரீகிருஷ்ணர். 18-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து, ஸ்ரீவாரி புஷ்கரணியில் உள்ள தெப்பத்தேரில் எழுந்தருளி தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

19-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 5 சுற்றுகள் பவனி வருகிறார். 20-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தெப்போற்சவத்தையொட்டி 16, 17-ந்தேதிகளில் ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் 18, 19, 20-ந்தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, வசந்தோற்சவம் ஆகிய ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

தெப்போற்சவத்தையொட்டி ஸ்ரீவாரி புஷ்கரணியில் தெப்பத்தேர் வடிவமைக்கும் பணி, தெப்பத்தேரில் மின் விளக்கு அலங்காரம் செய்யும் பணி, ஸ்ரீவாரி புஷ்கரணியை சுற்றிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News