புதுச்சேரி

எஸ்.பி நாரா சைதன்யாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

திருமாவளவன் மீது பா.ஜனதா பட்டியல் அணி புகார்

Published On 2023-05-07 08:15 GMT   |   Update On 2023-05-07 08:15 GMT
  • திருமாவளவன் எம்.பி மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • குற்றச்சாட்டுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா பட்டியலின அணி சார்பில் தலைவர் தமிழ் மாறன் தலைமையில் போலீஸ்துறை சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி நாரா சைதன்யாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போராட்டம் செய்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கொச்சைப்படுத்தும் விதத்தில் அவதூறு பரப்பும் விதத்திலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் புகழை குறைத்து அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்ததிய திருமாவளவன் எம்.பி மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு அளித்தபோது மாநிலத் துணைத் தலைவர்கள் எஸ்.கே.சி கஜேந்திரன், சுப்பிரமணி, ராஜேஸ்வரி, மாநில செயலாளர்கள் அருள், ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் கலை மாமணி தட்சிணாமூர்த்தி, காமாட்சி, சமூக வலைதள பிரிவு பொறுப்பாளர் அருள், அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் காத்தவராயன்,

நகர் மாவட்ட தலைவர் வெற்றிவேல், வில்லியனூர் மாவட்ட தலைவர் விண்ணரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags:    

Similar News