புதுச்சேரி
பிடிவாரண்டு பிறப்பிப்பு- புதுச்சேரி கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்
- அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- திருமாவளவன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார்.
புதுச்சேரி:
புதுவை வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே 2014-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பா.ம.க. தலைவர்களை விமர்சித்து பேசினார்.
கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மீதான விசாரணை புதுவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையின்போது விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து அவருக்கு 2-வது குற்றவியல் நடுவர் நீதிபதி ரமேஷ் பிடிவாரண்டு பிறப்பித்தார்.
இதை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.