புதுச்சேரி
கோப்பு படம்.

காலாப்பட்டு தொழிற்சாலை நிர்வாகிகள் மீது வழக்கு

Published On 2023-11-20 08:57 GMT   |   Update On 2023-11-20 08:57 GMT
  • தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் இறந்துள்ளனர்.
  • கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவை காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் இறந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் எத்தனைபேர் எத்தனை சதவீதம் தீக்காயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர் என அறிக்கையாக வெளியிடவேண்டும்.

காலாப்பட்டு தனியார் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசடைந்து அருகில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், அப்பகுதி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தொழிற்சாலை சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது குழந்தை தொழிலாளர் ஒருவர் விபத்தில் இறந்துள்ளார். குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தியது தண்டனைக்குரிய குற்றம். இந்த குற்றத்தை செய்த நிறுவன உரிமையாளர், நிர்வாக இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News