புதுச்சேரி

 ஆதித்யாஸ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணியினை கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் தொடங்கி வைத்த காட்சி.  

ஆதித்யாஸ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்

Published On 2023-12-04 08:18 GMT   |   Update On 2023-12-04 08:18 GMT
  • விழாவில் உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் ஒயினில் கலந்து ஊற வைக்கப்பட்டன.
  • ஏற்பாடுகளை துணை முதல்வர் பூங்குழலி ஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள், மாண வர்கள் செய்திருந்தனர்.

புதுச்சேரி:

அரியாங்குப்பத்தில் இயங்கி வரும் ஆதித்யாஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓட்டல் மேலாண்மை கல்லூரியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்ப தற்காக பழங்கள் ஊற வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இந்த விழாவில் உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் ஒயினில் கலந்து ஊற வைக்கப்பட்டன. இந்த ஊறல் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் போது சேர்க்கப்படுகிறது.

இவ்வாறு தயாரிக்கப்படும் கேக் இந்த ஆண்டும் சிறப்பாக அமை யும் என்பது ஒரு ஐதீகம் என்று கருதப்படு கிறது. இது ஒரு பாரம்பரிய மான விழாவாகும்.

இந்த விழா கல்லூரியில் ஆண்டுதோறும் மாணவ- மாணவிகள் முன்னிலையில் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது.

விழாவிற்கான ஏற்பாடு களை துணை முதல்வர் பூங்குழலி ஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள், மாண வர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News