புதுச்சேரி

   கலை பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியனிடம் வக்கீல் ராம்முனுசாமி சந்தித்து கடிதம் அளித்த காட்சி.

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் பெயரில் இருக்கை

Published On 2023-12-03 03:31 GMT   |   Update On 2023-12-03 03:31 GMT
  • அரசுக்கு கோரிக்கை
  • ப.கண்ணன் பெயரில் புகழஞ்சலி கூட்டம் நடத்தி இலக்கிய பெருமக்கள் மற்றும் சான்றோ ர்களை கவுரவப்படுத்த உள்ளேன்.

புதுச்சேரி:

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியனை, வக்கீல் ராம் முனுசாமி சந்தித்து கடிதம் ஒன்றை

வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசின் கலை பண் பாட்டுத்துறையின்கீழ் உள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் பெயரில் இருக்கை (அறக்கட்டளை ) ஒன்றை அமைக்க வேண்டும். இதற்கான முழு செலவையும் தான் ஏற்றுக் கொள்கிறேன்.

இதுபோல் இனி ஆண்டுதோறும் ப.கண்ணன் பெயரில் புகழஞ்சலி கூட்டம் நடத்தி இலக்கிய பெருமக்கள் மற்றும் சான்றோ ர்களை கவுரவப்படுத்த உள்ளேன்.

இவ்வாறு வக்கீல் ராம் முனுசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News