புதுச்சேரி
மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் பெயரில் இருக்கை
- அரசுக்கு கோரிக்கை
- ப.கண்ணன் பெயரில் புகழஞ்சலி கூட்டம் நடத்தி இலக்கிய பெருமக்கள் மற்றும் சான்றோ ர்களை கவுரவப்படுத்த உள்ளேன்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியனை, வக்கீல் ராம் முனுசாமி சந்தித்து கடிதம் ஒன்றை
வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் கலை பண் பாட்டுத்துறையின்கீழ் உள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் பெயரில் இருக்கை (அறக்கட்டளை ) ஒன்றை அமைக்க வேண்டும். இதற்கான முழு செலவையும் தான் ஏற்றுக் கொள்கிறேன்.
இதுபோல் இனி ஆண்டுதோறும் ப.கண்ணன் பெயரில் புகழஞ்சலி கூட்டம் நடத்தி இலக்கிய பெருமக்கள் மற்றும் சான்றோ ர்களை கவுரவப்படுத்த உள்ளேன்.
இவ்வாறு வக்கீல் ராம் முனுசாமி தெரிவித்துள்ளார்.