புதுச்சேரி

அப்துல்கலாம் குடியிருப்பில் பராமரிப்பு பணிகளை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

அப்துல்கலாம் குடியிருப்பில் பராமரிப்பு பணிகள்

Published On 2023-11-23 08:04 GMT   |   Update On 2023-11-23 08:04 GMT
  • கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • ரூ.41 லட்சத்து 70 ஆயிரம் செலவில் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவறை,குளியல் அறை, கதவுகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்வதற்கான தொடக்க விழா நடந்தது.

புதுச்சேரி:

புதுச்சேரி உப்பளம் தொகுதிக் குட்பட்ட அப்துல்கலாம் அரசு குடியிருப்பு பகுதியை புனரமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.41 லட்சத்து 70 ஆயிரம் செலவில் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவறை,குளியல் அறை, கதவுகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்வதற்கான தொடக்க விழா நடந்தது. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூஜை செய்து பராமரிப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் பொதுப்பணித் துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (மத்திய) கோட்டம் செயற்பொறி யாளர் திருஞானம், உதவிப்பொறி யாளர் பார்த்தசாரதி இள நிலைப் பொறியாளர் ஜெய சந்திரன், தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், ஹரிகிருஷ்ணன், ராஜி, விநாயகமூர்த்தி, ராகேஷ், பாலாஜி, மோரிஸ், பஸ்கல், ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News