புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சங்கமம் நிறுவனர் தினேஷ்குமார் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினார்

முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நினைவு பரிசு

Published On 2023-05-07 08:25 GMT   |   Update On 2023-05-07 08:25 GMT
  • பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி திடலில் நடந்தது.
  • தினேஷ்குமார் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார் .

புதுச்சேரி:

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு குளோபல் அகாடமி, சுற்றுலாத்துறை, இந்திரா காந்தி தேசிய கலை மையம் இணைந்து நடத்திய ஆனந்த தாண்டவம், 2600 மாணவிகள் பங்கேற்ற உடுக்கையுடன் கூடிய பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி திடலில் நடந்தது.

இதில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர் சங்கமம் நிறுவனர் தினேஷ்குமார் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார் .

பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, பாரதியார் பல்கலைக்கூட பேராசிரியர்கள் விசித்திரா, முனைவர் சாந்திபாபு, அண்ணாமலை பல்கலைக்கழக இசை துறை பேராசிரியை சின்னமனூர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News