புதுச்சேரி

நேரு எம்.எல்.ஏ ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்த காட்சி.

புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணி

Published On 2023-06-26 09:07 GMT   |   Update On 2023-06-26 09:07 GMT
  • அதிகாரிகளுடன் நேரு எம்.எல்.ஏ. ஆய்வு
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளுதல் சம்பந்தமாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

புதுச்சேரி:

புதிய பஸ் நிலையத்தை நேரு எம்.எல்.ஏ ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகளுடன்  ஆய்வு செய்தார்.

புதிய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை, பயணிகள் தங்க ஓய்வறைகள் அமைத்தல், பஸ் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளுதல் சம்பந்தமாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

 ஆய்வின் போது புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரியான ரவிச்சந்திரன், திருஞானம் நகராட்சி செயற்பொறி யாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் உருளையன்பேட்டை தொகுதி மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News