புதுச்சேரி
புதிய சாலை - வடிகால் வாய்க்கால் பணி
- கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- அதிகாரிகளும் விரைந்து முடித்து தருவதாக உறுதியளித்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேத்தாஜி நகர் 3 பகுதியில் புதியசாலை மற்றும் எல் வடிவ வடிக்கால் வாய்கால் அமைக்கப்படுகிறது. இப்பணியினை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் சண்முகசுந்தரம் ஊர்பஞ்சாயத்தாரர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள், கட்சி நிர்வாகிகள் சக்திவேல், கண்ணன், ராஜி, அருள், கணேசன், சண்முகம், மனோஜ், ராமலிங்கம், வீரமுருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கென்னடி எம்.எல்.ஏ. இப்பணியை மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து முடித்துத்தர நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
அதிகாரிகளும் விரைந்து முடித்து தருவதாக உறுதியளித்தனர்.