புதுச்சேரி

விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய காட்சி.

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சி

Published On 2023-12-02 09:08 GMT   |   Update On 2023-12-02 09:08 GMT
  • கவர்னர் தமிழிசை பங்கேற்பு
  • பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார்.

புதுச்சேரி:

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பிலான மத்திய அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி பாகூர் அடுத்த சோரியங்குப்பம் கிராம பஞ்சாயத்தில் நடந்தது.

அதில், சிறப்பு விருந்தினராக, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு வேளாண் துறை, குடிமை பொருள் வழங்கல், ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை கலெக்டர் மகாதேவன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து எரி வாயு மற்றும் வீடு கட்ட மானியம் பெற்ற பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கவர்னர் தமிழிசை சந்தித்தார்.

Tags:    

Similar News