புதுச்சேரி

திருபுவனை வழியாக கடலூர் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ள காட்சி.

சாலை துண்டிப்பால் பொதுமக்கள்- வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-09-15 05:22 GMT   |   Update On 2023-09-15 05:22 GMT
  • வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி சென்று தற்போது பயணித்து வருகிறார்கள்.

புதுச்சேரி:

சென்னை - நாகப்பட்டினம் 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால் புதுச்சேரி -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருபுவனை பகுதியில் மேம்பாலங்கள் மற்றும் 3 வழி சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதனால் நேற்று முன்தினம் அதிகாலையில் திருபுவனையில் இருந்து கடலூர் வழியாக முக்கிய கிராமங்களை இணைக்கும் சாலை துண்டிக்கப்பட்டு பள்ளங்கள் தோண்டப்ப ட்டுள்ளன.

இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதிகப்படியான தொழிற்சாலைகளும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் வாகனங்கள் அதிக அளவில் செல்லும் இந்த பகுதியில் தற்போது வாகனங்கள் 3 பக்கமும் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

தற்போது விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் வழியாக கனரக வாகனங்கள் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி சென்று தற்போது பயணித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News