புதுச்சேரி

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ் சான்றிதழ் வழங்கிய காட்சி. 

முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின விழா

Published On 2023-12-03 05:24 GMT   |   Update On 2023-12-03 05:24 GMT
  • சிறப்பு விருந்தினராக நாவலாசிரியர் இளவரசி சங்கர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
  • ஆசிரியர் ஜீவா மற்றும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் செய்தி ருந்தனர்.

புதுச்சேரி:

புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

தலைமை விருந்தினராக புதுச்சேரி சிறப்பு அதிரடி படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக நாவலாசிரியர் இளவரசி சங்கர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். டாக்டர் ரங்கநாயகி வளவன், விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேனார். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், கவுண்டன் பாளையம் ஊர் தலைவர் ஜெகதீஸ்வரன், என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் கோபி, பள்ளியின் துணை முதல்வர் வினோ லியா, பள்ளியின் ஆலோசகர் ரத்தின பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்க ளின் வண்ணம் வாரியாக அணிவகுப்பு, வண்ண பலூன்களை பறக்க விடுதல், யோகாசனம், நடனம், சிலம்பம், பென்சிங், கராத்தே, மல்லர் கம்பம் கயிரேற்றம், வில்வித்தை , போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

மேலும் பெற்றோர்களுக்கு லக்கி பால்போன்ற போட்டி கள் நடைபெற்றது. இது பார்வையாளர்களை அனை வரையும் கவர்ந்தது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி யின் பொறுப்பாளர் ஜஸ்டின், ஆசிரியர் ஜீவா மற்றும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் செய்தி ருந்தனர்.

Tags:    

Similar News