புதுச்சேரி

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. குடிநீர் மையத்தை கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு செய்த காட்சி.

சுத்திகரிக்கப்பட்ட மையத்தில் தரமற்ற குடிநீர் விநியோகம்

Published On 2023-11-15 06:12 GMT   |   Update On 2023-11-15 06:12 GMT
  • கென்னடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
  • சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் மையத்தில் விநியோகிக்கப்படும் தண்ணீர் சரியில்லை என்று கடந்த ஒருவாரமாக பொது மக்கள் குறை கூறி வருகின்றனர்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதி, அம்பேத்கர் சாலையில் பொதுப் பணித்துறை தண்ணீர் டேங்க் மற்றும் திருவள்ளுவர் வீதி எதிரில் அமைந்திருக்கும் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் மையத்தில் விநியோகிக்கப்படும் தண்ணீர் சரியில்லை என்று கடந்த ஒருவாரமாக பொது மக்கள் குறை கூறி வருகின்றனர்.

இதனை அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி குடிநீர் மையத்தை கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது தரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை அறிந்தார்.அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதி காரிகளை நேரில் சந்தித்து சுத்திகரிக்கப்பட்ட (ஆர்.ஓ.) குடிநீர் மையத்தில் உள்ள பில்டரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலி யுறுத்தினார். அப்போது பொதுப் பணித்துறை உத விப்பொறியாளர் வாசன், இளநிலைப் பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் உடனடியாக சரி செய்து புதிய பில்டரை பொருத்தி தருகிறோம் என்று

எம்.எல்.ஏ.விடம் உறுதி யளித்தனர்.

தி.மு.க. நிர்வாகி கள் இருதயராஜ். ராகேஷ், மோரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News