புதுச்சேரி

சாராயத்தில் மண் இருப்பதாக வாட்ஸ்அப்பில் புகார் அளித்த குடிமகன்

Published On 2022-07-07 09:21 GMT   |   Update On 2022-07-07 09:21 GMT
  • வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சேதராப்பட்டில் உள்ள ஒரு சாராயக் கடையில் சாராயம் வாங்கிய ஒருவர் அதை டம்ளரில் ஊற்றினார். அப்போது சாராயத்தில் மண் இருந்தது.
  • உடனடியாக கடை ஊழியரிடம் கொடுத்த போது அவர் வடிகட்டி கொடுத்தார். இதை ஏற்காத குடிமகன் வேறு சாராயம் தரும்படி கூறியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவையில் அரசு அனுமதியுடன் சாராய கடைகள் இயங்கி வருகின்றன.

வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சேதராப்பட்டில் உள்ள ஒரு சாராயக் கடையில் சாராயம் வாங்கிய ஒருவர் அதை டம்ளரில் ஊற்றினார். அப்போது சாராயத்தில் மண் இருந்தது.

உடனடியாக கடை ஊழியரிடம் கொடுத்த போது அவர் வடிகட்டி கொடுத்தார். இதை ஏற்காத குடிமகன் வேறு சாராயம் தரும்படி கூறியுள்ளார்.

கடை ஊழியர் மறுத்ததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதத்தை வீடியோவாக எடுத்தவரிடம், எந்த வீடியோ எடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது, உரிமையாளரை கேட்டுவிட்டு மாற்றி தருகிறேன் என கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த குடிமகன் அந்த வீடியோவை வாட்ஸ்அப் மூலம் கலால்துறை இணை ஆணையருக்கு அனுப்பி புகார் தெரிவித்தார்.

இதையடுத்து கலால்துறை ஊழியர்கள் அந்த கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News