புதுச்சேரி
புதுச்சேரியில் நடராஜர் சிலையின் தலையில் படம் எடுத்து ஆடிய நாகபாம்பு
- சிற்ப துறையில் படிக்கும் மாணவர்கள் பயனற்ற இரும்பு, நட்டு, போல்ட் போன்றவற்றை கொண்டு உருவாக்கிய நடராஜர் சிலை உள்ளது.
- ஊழியர் ஒருவர் பத்திரமாக பாம்பை மீட்டு அடர்ந்த தோட்டப்பகுதியில் விடுவித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பத்தில் பாரதியார் பல்கலைக்கூடம் உள்ளது.
இங்கு சிற்ப துறையில் படிக்கும் மாணவர்கள் பயனற்ற இரும்பு, நட்டு, போல்ட் போன்றவற்றை கொண்டு உருவாக்கிய நடராஜர் சிலை உள்ளது.
இதன் தலைமீது 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு அமர்ந்து இருந்தது. இதனை ஊழியர்கள் கண்டதும் நாகம் படம் எடுத்து ஆடியது.
இதைக் கண்ட ஊழியர்கள் வியந்து பார்த்தனர். பின்னர் ஊழியர் ஒருவர் பத்திரமாக பாம்பை மீட்டு அடர்ந்த தோட்டப்பகுதியில் விடுவித்தார்.