புதுச்சேரி

கோப்பு படம்.

வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-11-24 07:19 GMT   |   Update On 2023-11-24 07:19 GMT
  • உடல் பாதிப்படைந்த அதல்பரை உறவினர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை குருசுகுப்பம் பத்மினி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செயின்ட்டு அந்துவான். இவரது மனைவி மரிகிளேர். இவர் அரவிந்தர் ஆசிரம் நூலகத்தில் வேலை செய்து வருகிறார். மகன் அதல்பர் வயது 27) இவர் அதே பகுதியில் உள்ள அத்தை வீட்டில் வசித்து வந்தார்.

அவ்வப்போது அதல்பர் தனது தாயை சந்தித்து நலன் விசாரித்து செல்வார்.

அதுபோல் சம்பவத்தன்று இரவு அதல்பர் தனது தாயை சந்திக்க வந்தார். அப்போது மரிகிளேர் வேலைக்கு எதுவும் செல்லா மல் ஊர் சுற்றி வருகிறாயே என அதல்பரை கண்டித்த தாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அதல்பர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எலி மருந்தை எடுத்து தின்று விட்டார்.

இதில் உடல் பாதிப்படைந்த அதல்பரை உறவினர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தும் பலனின்றி நேற்று இரவு அதல்பர் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து மரிகிளேர் கொடுத்த புகாரின் பேரில் சோலை நகர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News