புதுச்சேரி

சேலம் சூரமங்கலம் அப்பா பைத்தியம் சாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.

அப்பா பைத்தியம் சாமி கோவில் கும்பாபிஷேகம்: புதுவை முதல்-மந்திரி ரங்கசாமி பங்கேற்பு

Published On 2022-09-07 07:13 GMT   |   Update On 2022-09-07 07:13 GMT
  • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
  • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சேலம்:

சேலம் சூரமங்கலம் அப்பா பைத்தியம் சாமி கோவில் கட்டப்பட்டு 23 ஆண்டுகள் ஆகின்றன. முதல் முறையாக கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. தற்போது திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) காலை 10.15 மணிக்கு நடக்கிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலையில் திருவிளக்கு பூஜை, மங்கள வாத்தியம், புனித நீர் வழிபாடு நடந்தது. 5-ந் தேதி காலை வேள்வி பூஜை, இரவு 7 மணிக்கு முதல் கால வேள்வி, இரவு 9 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது.

தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. 8.40 மணிக்கு சற்குருவுக்கு 108 திரவியங்கள் மூலம் வழிபாடு நடத்தப்பட்டன. மாலை 3-ம் கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை சற்குருவிற்கு 108 திரவிய வழிபாடு நடந்தது. 9.45 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. 10.15 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாராதனை நடந்தது.

கும்பாபிஷேகத்தில் புதுவை முதல்-மந்திரி ரங்கசாமி, சேலம் ஆர்.டி.ஓ.விஷ்ணுவர்தினி, கோவில் நிர்வாகி முத்துமாணிக்கராஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News