புதுச்சேரி

தி.மு.க. பொதுகுழு உறுப்பினர் கோபால் கழிவு நீரை வாய்க்காலை ஆய்வு செய்த காட்சி.

உப்பனாறு வாய்க்கால் அடைப்பை அகற்ற வேண்டும்

Published On 2023-12-05 08:20 GMT   |   Update On 2023-12-05 08:20 GMT
  • தி.மு.க. பொதுகுழு உறுப்பினரிடம் பொது மக்கள் கோரிக்கை
  • வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி:

மழையால் பாதித்த உருளையன்பேட்டை சின்னப் பொய்கை வீதி, குபேர் நகர், கோவிந்த சாலை, ராஜா நகர், கென்னடி நகர் பகுதிகளில் மழைநீர் மற்றும் உப்பனாறு வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த தி.மு.க. தொகுதி தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வைட்டார். அப்போது, உப்பனாறு வாய்க்காலில் உள்ள மரங்கள் மற்றும் மண் அடைப்புகளால் கழிவுநீர் வாய்க்கால் வழியாக வெளி யேற முடியாமல் ஊருக்குள் நுழைவதால் வாய்க்கால் அடைப்பை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

மழை நின்ற பின் உப்பனாறு வாய்க்காலில் இருக்கும் மரம், செடி மற்றும் அடைப்புகள் சரி செய்யப்படும் என்று கோபால் உறுதி அளித்தார். தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நிகழ்ச்சியின் போது தி.மு.க. துணை அமைப்பாளர் தைரிய நாதன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைச் செயலா ளர் முருகன், பொருளாளர் சசிகுமார், வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு, இலக்கிய பகுத்தறிவு துணைத் தலைவர் ராஜேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரெமிஎட்வின், தாமரைக் கண்ணன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஸ்டீபன்ராஜ், கிளைச் செயலாளர்கள் அகிலன், சாலமன், பில்லா, சரவணன், அந்தோணி, பிரகாஷ், ராஜவேலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News