search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக வெற்றியை வழங்கி உள்ளனர்.
    • அமைச்சர்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றன. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி கட்சியினரே வெற்றி பெற்றனர்.

    இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தி.மு.க. முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது. அமைச்சர் முத்துசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-


    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக வெற்றியை வழங்கி உள்ளனர். இதையடுத்து கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல், வெற்றி வியூகம் வகுத்த தி.மு.க. நிர்வாகிகளுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழாவை கோவையில் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தார்.

    கோவை கொடிசியா மைதானத்தில் வருகிற 15-ந் தேதி விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் மற்றும் புதுவையில் வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 40 பேரும் பங்கேற்க உள்ளனர்.

    மேலும் அமைச்சர்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யானை ஒன்று வால்பாறை-பொள்ளாச்சி நெடுஞ்சாலைக்கு வந்து அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது.
    • சுற்றுலா பயணிகள் யானையை கண்டதும் குதூகலம் அடைந்து செல்பி எடுக்க முயன்றனர்.

    வால்பாறை:

    வால்பாறை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

    அவற்றில் பெரும்பாலானவை வாட்டார் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளன. கடந்த வாரம் அந்த வழியாக வந்த ஒரு காரை யானை உடைத்து சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வனத்தை விட்டு வெளியேறிய யானை ஒன்று வால்பாறை-பொள்ளாச்சி நெடுஞ்சாலைக்கு வந்து அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது.

    அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் யானையை கண்டதும் குதூகலம் அடைந்து செல்பி எடுக்க முயன்றனர். இதனால் மிரண்ட காட்டு யானை அந்த வாகனத்தை விரட்டியது.

    வால்பாறை-பொள்ளாச்சி சாலைக்கு வந்த ஒரு காட்டு யானை, அந்த வழியாக சென்ற காரை துரத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,

    வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் திரியும் யானைகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தாயுடன் குட்டியை சேர்க்கும் பணி தோல்வி அடைந்தது.
    • குட்டி யானையை முதுமலை யானைகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றனர்.

    வடவள்ளி:

    கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு பெண் யானை கிடந்தது.

    அதன் அருகே ஆண் குட்டி யானை ஒன்றும் இருந்தது. வனத்துறையினர் பெண் யானைக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் அனுப்பினர். அதற்கு முன்னதாகவே அதன் குட்டி யானை காட்டுக்குள் சென்று விட்டது.

    இந்தநிலையில் விராலியூர் அருகே தனியார் தோட்டத்தில் பரிதவிப்புடன் நின்ற குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். அட்டுக்கல் வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியை சேர்க்க முயன்ற போது, தாய் யானை குட்டியை நிராகரித்து விட்டு ஓடிச் சென்றது. இதனால் தாயுடன் குட்டியை சேர்க்கும் பணி தோல்வி அடைந்தது.

    பின்னர் குட்டி யானையை வாகனம் மூலம் மருதமலை யானை மடுவு யானை வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு வந்து, வேறு காட்டு யானைகள் கூட்டத்துடன் அதனை சேர்க்க முயன்றனர். ஆனால் அந்த யானைகள் சேர்க்கமாமல் விரட்டி விட்டது.

    இதையடுத்து வனத்துறையினர் குட்டி யானையை குடியிருப்பு பகுதிக்கு கொண்டு வந்து உணவு கொடுத்து பராமரித்து வந்தனர். நேற்று 4-வது நாளாக மீண்டும் குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் பணி நடந்தது. ஆனால் நேற்றும் குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் பணி தோல்வியில் முடிந்தது.

    கடந்த 4 நாட்களுக்கும் மேலாக வனத்துறையினர், குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும், அவர்களின் அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் குட்டி யானையை முதுமலை முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.

    அதன்படி இன்று அதிகாலை மருதமலை வனச்சரகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானையை வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றினர். பின்னர் குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு குட்டி யானைக்கு சிகிச்சை அளித்து அதனை, பராமரிக்க உள்ளனர்.

    • கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துகளை தெரிவித்தார்.
    • விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், மறைக்கப்படும் மறுக்கப்பட்டும் வருகிறது.

    தமிழக பாடத்திட்டத்தில் தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய பாடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார்.

    கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் பற்றிய மிகைப்படுத்துதலும், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களும் தான் உள்ளது.

    நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், மறைக்கப்படும் மறுக்கப்பட்டும் வருகிறது.

    கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு, மார்க்சிய சிந்தனை உள்பட பல சிந்தனைகள் தடையாக உள்ளன.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குழந்தையை விலைக்கு வாங்கியது சூலூர் திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி விஜயன் என்பது தெரியவந்தது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சூலூர்:

    பீகாரை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி அஞ்சலி.

    இவர்கள் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் பீகாரில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்தி வந்து விற்பனை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சம்பவத்தில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது. யாரிடம் இருந்து குழந்தை கடத்தி வரப்பட்டது. வாங்கியவர்கள் யார்? என்பது உள்ளிட்ட விரிவான விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. தங்கராமன் மேற்பார்வையில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    தனிப்படை விசாரணையில், குழந்தையை விலைக்கு வாங்கியது சூலூர் திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி விஜயன் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு குழந்தை இல்லை என்பதை தெரிந்து கொண்ட மகேஷ்குமார் ஆசை வார்த்தை கூறி சட்டப்படியான குழந்தையை பெற்று தருவதாக கூறினார். ஆனால் அவர் போலியான ஆவணங்களை கொடுத்து எங்களிடம் ஏமாற்றி குழந்தையை ரூ.2.50 லட்சத்துக்கு விற்று விட்டார் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    பின்னர் விஜயனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கும் தினந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • பயணிகள் கூட்டம் காரணமாக முன்பதிவில்லா பெட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.

    கோவை:

    கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், நீலகிரி எக்ஸ்பிரஸ், இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் உள்பட 8 ரெயில்கள், வாரந்தோறும் 11 ரெயில்கள் என 20 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதேபோல் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கும் தினந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவையில் இருந்து சென்னை, நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் கேரளாவில் இருந்து கோவை வந்து சென்னைக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எப்போதுமே கூட்டம் அலைமோதும்.

    கோடை விடுமுறையையொட்டி சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் தங்கள் விடுமுறையை கழிப்பதற்காக கோவையில் உள்ள தங்கள் உறவினர் வீடுகளுக்கு வந்திருந்தனர்.

    தற்போது கோடைவிடுமுறை முடிந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு வந்தவர்கள், சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

    இதன் காரணமாக கோவையில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரெயில்கள் மற்றும் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதுவும் குறிப்பாக ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

    கோவையில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் பயணிகள் குடும்பம், குடும்பமாக பயணிக்கின்றனர்.

    சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் போன்ற 10-க்கும் மேற்பட்ட ரெயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் முன்பதிவு டிக்கெட் பெறுவதற்கு 20 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் டிக்கெட் கிடைக்கும்.

    அதன்படி சிலர், முன்பதிவு செய்து ரெயிலில் பயணம் செய்கின்றனர். டிக்கெட் கிடைக்காதவர்கள் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்கின்றனர்.

    முன்பதிவில்லா பெட்டிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக உள்ளது. ரெயிலில் உள்ள இருக்கைகள் முழுவதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    கோவையில் இருந்து நேற்று இரவு நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதுவும் முன்பதிவில்லா பெட்டியில் பயணிகள் போட்டி போட்டு கொண்டு இருக்கையை பிடிக்க ஓடினர். பயணிகள் கூட்டம் காரணமாக முன்பதிவில்லா பெட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.

    ரெயிலில் உள்ள கீழ் இருக்கைகள் நிரம்பியதால் பலர் மேலே உள்ள இருக்கைகளிலும், நடந்து செல்லும் பாதைகளிலும் அமர்ந்து கொண்டனர். இன்னும் பலர் நின்று கொண்டும் பயணித்ததை பார்க்க முடிந்தது. ஒரு இடத்தில் ஒரு மற்றொரு இடத்திற்கு நகர முடியாத படி அனைத்து இடங்களிலும் பயணிகள் அமர்ந்து கொண்டு பயணம் செய்தனர். நிற்க கூட இடம் இல்லாமல் பயணிகள் தவித்தனர்.

    இதற்கிடையே கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்து விட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காத்திருப்பு பட்டியலில் 150க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். மேலும் தட்கல் டிக்கெட் திறந்த ஒரு சில மணி நேரங்களில் முடிந்து விட்டது.

    இதையடுத்து குழந்தைகளுடன் பலர் முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகளில் பயணம் செய்தனர். இன்றும், நாளையும் இன்னும் அதிகளவிலான பயணிகள் ரெயில் மூலம் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால பலர் 10-ந் தேதிக்கு பிறகு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    சொந்த ஊர் செல்ல பலர் இருப்பதால் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் அல்லது முன்பதிவு இல்லாத ரெயிலை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குட்டி யானை, தாயுடன் சேராமல் தனியாக பிரிந்து வந்து விட்டது.
    • குட்டி யானை மருதமலை வனத்துறையினர் குடியிருப்பு பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    கோவை:

    கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு பெண் யானை கிடந்தது. அதன் அருகே ஆண் குட்டி யானை ஒன்றும் இருந்தது. வனத்துறையினர் பெண் யானைக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் அனுப்பினர். அதற்கு முன்னதாகவே அதன் குட்டி யானை காட்டுக்குள் சென்று விட்டது.

    இந்தநிலையில் குட்டி யானை, தாயுடன் சேராமல் தனியாக பிரிந்து வந்து விட்டது. விராலியூர் அருகே தனியார் தோட்டத்தில் பரிதவிப்புடன் நின்ற குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு அதனை அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அட்டுக்கல் வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியை வனத்துறையினர் சேர்க்க முயன்றபோது, தாய் யானை குட்டியை நிராகரித்து விட்டு ஓடிச் சென்றது. இதனால் தாயுடன் குட்டியை சேர்க்கும் பணி தோல்வி அடைந்தது. பின்னர் குட்டி யானையை வாகனம் மூலம் மருதமலை யானை மடுவு யானை வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். அங்கு வேறு காட்டு யானைகள் கூட்டத்துடன் அதனை சேர்க்க முயன்றனர். ஆனால் அந்த யானைகள் குட்டியை தங்களுடன் சேர்க்காமல் விரட்டி விட்டது.

    இதனால் குட்டி யானை மருதமலை வனத்துறையினர் குடியிருப்பு பகுதிக்கு கொண்டு சென்றனர். குட்டி யானை வனத்துறையினரிடமும், பொதுமக்களிடமும் நன்கு பழகி விட்டது. யானைக்கு பழம் கொடுப்பது, உணவு கொடுப்பது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடுகிறார்கள். மக்களுடன் பழக்கப்பட்டு விட்டதால் தான் குட்டி யானையை காட்டு யானைகள் ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.

    குட்டி யானையை அதன் தாயுடன் சேர்க்கும் பணி இன்று 4-வது நாளாக நடைபெற உள்ளது. இன்றைய முயற்சியில் தோல்வி அடைந்தால் குட்டி யானையை டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்கலாம் என வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    • பாஜகவுடன் அதிமுக இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளை பிடித்திருப்போம் என எஸ்.பி. வேலுமணி சொல்கிறார்.
    • அதிமுக-வின் மற்ற தலைவர்கள் பாஜக உடன் நாங்கள் இல்லை. இதனால் வராத வாக்குகள் வரும். தற்போது எங்களுக்க நிர்பந்நம் இல்லை என்றார்கள்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டார். அதற்கு முன் பத்திரிகையாளருக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாஜகவுடன் அதிமுக இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளை பிடித்திருப்போம் என எஸ்.பி. வேலுமணி சொல்கிறார். அதிமுக-வின் மற்ற தலைவர்கள் பாஜக உடன் நாங்கள் இல்லை. இதனால் வராத வாக்குகள் வரும். தற்போது எங்களுக்க நிர்பந்நம் இல்லை என்றார்கள். இதனால் எஸ்.பி. வேலுமணி கூறியதை பார்க்கும்போது இதை பார்க்கும்போது அதிமுக கட்சியில் எடப்பாடி- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது.

    2019-ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது மத்தியில் பாஜக 303 இடங்களை பிடித்தது. அப்போது கூட தமிழகத்தில் ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. அதிமுக தலைவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் இந்த தேர்தலின் செய்தி. அதிமுக சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக மக்கள் நினைத்து விட்டார்கள். கூட்டணியில் இருக்கும்போது ஒரு பேச்சு. கூட்டணியில் இல்லாதபோது ஒரு பேச்சு.

    கோவையில் தொகுதிக்கு உட்பட்ட ஆறு எம்.எல்.ஏ. தொகுதியிலும் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. இதற்கு முன்னதாக கோவை தொகுதியில் இவ்வாறு பார்க்கவில்லை. கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள். மக்கள் நிராகரித்ததால் வேலுமணி இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    நாங்கள் வளருகின்ற கட்சி. வளர்ந்து கொண்டிருக்கிறோம். பூனை யானையாக வேண்டுமென்றால் கடுமையான பாதையில் நடந்து செல்ல வேண்டும். 3 சதவீதம் 10 ஆக வேண்டும். 10 சதவீதம் 20 ஆக வேண்டும். 20 சதவீம் 30 ஆக வேண்டும். பின்னர் எம்எல்ஏ-வாக வேண்டும். எம்.பியாக வேண்டும். அதுவரை கடுமையாக பணி செய்ய வேண்டும். இதனால் தொண்டரக்ள் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம்.

    திமுக தொண்டர்களுக்கு கை வைக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் என்மீது கை வையுங்கள். அப்பாவி ஆட்டை ஏன் வெட்டுகிறீர்கள்.

    10 சதவீதத்திற்கு மேல் வாக்கு பெற்றது ஏற்றம் இல்லையா? 12 இடத்தில் 2-வது இடம் என்பது ஏற்றம் இல்லையா? அதிமுகவின் கோட்டை என கூறப்பட்ட கோவையில் ஜஸ்ட் டெபாசிஸ்ட் வாங்கிருக்கிறார்கள். 3 முனை போட்டி 2 முனை போட்டியாக மாறி 40 முதல் 45 சதவீத வாக்குகள் வரும்.

    மின்சாரம் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு சொல்லவில்லை. அதற்கான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிடட்டும். 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

    மத்திய இணை அமைச்சர் பதவி கொடுக்கப்படுவதா கூறப்படுகிறதே? என்று கேள்விக்கு பதில் அளிக்காமல் வேறு கேள்விக்கு சென்றார்.

    • 2014-ல் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கியதை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் அண்ணாமலை.
    • விமர்சனங்களை விட்டுவிட்டு பாஜக ஆட்சியில் கோவைக்கு திட்டங்களை அண்ணாமலை கொண்டு வரட்டும்.

    கோவை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

    * கடந்த காலங்களிலும் கோவையில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

    * 2019 பாராளுமன்ற தேர்தலில் தோற்ற பின்னரும் 2021-ல் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் முழுமையாக வெற்றி பெற்றது.

    * கோவையில் 2019-ல் அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகளை விட தற்போது அதிக வாக்குகளை பெற்றுள்ளோம்.

    * பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது அதிகம் பேசியது அண்ணாமலை தான்.

    * அதிமுக- பாஜக கூட்டணி பிரிவுக்கு காரணம் அண்ணாமலை தான்.

    * 2014-ல் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கியதை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் அண்ணாமலை.

    * விமர்சனங்களை விட்டுவிட்டு பாஜக ஆட்சியில் கோவைக்கு திட்டங்களை அண்ணாமலை கொண்டு வரட்டும்.

    இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.

    • அண்ணாமலையின் தோல்வியை பா.ஜ.க.வினரால் ஜீரணிக்க முடியவில்லை.
    • பாராளுமன்ற தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு பாதகமாகவே கருதப்படுகிறது.

    கோவை:

    தென்இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை கொங்கு மண்டலத்தின் தலைநகர் போல் திகழ்கிறது. சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரான கோவை எந்தவொரு பொதுத்தேர்தல் வந்தாலும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் நகரமாக மாறி விடுகிறது.

    இதற்கு காரணம் நடந்து முடிந்த பல தேர்தல்களும், தற்போது நடந்துள்ள 18-வது பாராளுமன்ற தேர்தலுமே சாட்சி. கடந்த பல ஆண்டுகளாக கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல நகரங்கள் அ.தி.மு.க.வின் கோட்டையாகவே பார்க்கப்பட்டு வந்தது.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது கொங்கு மண்டலங்களில் பெற்ற வெற்றி தான் முக்கிய காரணம் ஆகும்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின் கடந்த 2021-ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. தமிழகம் முழுவதும் தி.மு.க. பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9-ல் அ.தி.மு.க.வும், 1-ல் அதன் கூட்டணி கட்சியாக இருந்த பா.ஜ.க.வும் வெற்றி பெற்றன.

    அதன்பிறகு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கவனம் முழுக்க கோவை பக்கம் திரும்பியது. ஆட்சி பொறுப்பேற்றதும் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார். அதன்பலனாக உள்ளாட்சித் தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

    தமிழகத்தில் பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான கோவையை தி.மு.க. கைப்பற்றியது. மாவட்டத்தில் பெரும்பாலான உள்ளாட்சி இடங்களை தி.மு.க.வே பிடித்தது.

    அதைத்தொடர்ந்து தான் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானது. கோவை பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் தமிழக தலைவர் அண்ணாமலை களமிறக்கப்பட உள்ளதை முன்கூட்டியே அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி வியூகங்களை அமைத்தார்.

    பல ஆண்டுகளாக கோவை பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வின் கூட்டணிகளிடமே இருந்தது. இந்த முறை எதிரணியான பா.ஜ.க. கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக கோவையை கம்யூனிஸ்டு கட்சியிடம் இருந்து தி.மு.க. கேட்டுப்ெபற்றது. அதற்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. விட்டுக் கொடுத்தது. கோவையில் பா.ஜ.க.வை எதிர்த்து களம் காண தி.மு.க. தயாரானது.

    தி.மு.க. சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவியது. மூத்த தலைவர்கள் பலர் முட்டிமோத யாரும் எதிர்பாராத வகையில் கணபதி ராஜ்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் அறிவிக்கப் பட்டதும் தி.மு.க.வின ரிடையே திடீர் சலசலப்பு ஏற்பட்டது. காரணம் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சமீபத்தில் தான் தி.மு.க.வில் சேர்ந்தவர். அண்ணாமலையை எதிர்த்து போட்டியிட இவர் வலுவான வேட்பாளர் இல்லை, சாதாரண வேட்பாளரை நிறுத்தி விட்டனர் என்றெல்லாம் பேசப்ப ட்டது.

    ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்தது. கணபதி ராஜ்குமார் கோவை மாநகராட்சி மேயராக பணியாற்றியவர். மக்களுடன் நெருங்கி பழகியவர். அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்தவர். ஏற்கனவே பழக்கப்பட்ட முகம் என்பதால் எளிதில் மக்களை அடைந்து விடுவார் என எண்ணினார். மேலும் அ.தி.மு.க.வில் இருந்து வந்த அவர் எதிரணியின் பலவீனங்களையும் நன்கு அறிந்தவர். இதுவும் வெற்றிக்கு சாதகமாக அமையும் என்று கருதினார்.

    மு.க.ஸ்டாலினின் வியூகத்தை உணர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கணபதி ராஜ்குமாருடன் கைகோர்த்தனர். கோவைக்கு பொறுப்பு அமைச்சராக உள்ள முத்துசாமியுடன் கூடுதலாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் களமிறக்கப்பட்டார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆலோசனைப்படி அவர் கோவையிலேயே முகாமிட்டு தேர்தல் பணியை மேற்கொண்டார். அவரது பிரசார வியூகமே புது விதமாக இருந்தது.

    ஓட்டுக்களை கொத்து, கொத்தாக அள்ளுவதே அவரது குறிக்கோளாக இருந்தது. இதற்காக தொழில்துறையினர், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது கடைசி கட்ட பிரசாரத்தை கோவையில் தான் அமைத்திருந்தார்.

    தி.மு.க. நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி களப்பணியாற்றச் செய்தார். இவ்வாறு அமைக்கப்பட்ட பல்வேறு வியூகங்கள் தான் இன்று கோவை தொகுதியில மாபெரும் வெற்றியை தி.மு.க.வு க்கு பெற்று தந்துள்ளது.

    ஒரு கட்டத்தில் அண்ணாமலை என்ற பெயர் கோவை முழுக்க எதிரொலிக்க அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் 3 முறை பிரசாரம் செய்தார். அப்போது தி.மு.க.வினர் சற்று தடுமாற வெற்றி நமக்கு தான், தைரியமாக பணியாற்றுங்கள் என்று கூறி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உற்சாகப்படுத்தினார்.

    தேர்தல் முடிந்த கையோடு தி.மு.க. நிர்வாகிகள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து கருத்து கேட்டார். வெற்றி உறுதி என்று நிர்வாகிகள் சொன்னதும் அனைவரையும் அவர் பாராட்டினார்.

    இவ்வாறு பல்வேறு அதிரடி வியூகங்கள் அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாமலையை வீழ்த்தியே விட்டார். 28 ஆண்டுகளுக்கு பின் கோவை தொகுதியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

    இதற்கிடையே அண்ணாமலையின் தோல்வியை பா.ஜ.க.வினரால் ஜீரணிக்க முடியவில்லை. அண்ணாமலை பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது.

    கோவை தொகுதிக்கென தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அவரை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் என பலரும் பிரசாரம் மேற்கொள்ள எப்படியும் அண்ணாமலை வெற்றி பெற்று விடுவார் என்றே பா.ஜ.க.வினர் கருதி வந்தனர். ஆனால் தி.மு.க. வேட்பாளரிடம் அண்ணாமலையை தோல்வியை தழுவி விட்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

    தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை, விலையில்லா பஸ் பயண திட்டம் ஆகியவை தி.மு.க.வுக்கு கைகொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தனியே நின்றது அண்ணாமலையின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். கோவை தொகுதியில் உள்ள சிறுபான்மையின மக்களின் மொத்த வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு சென்று விட்டன. ஊரகப்பகுதியில் தி.மு.க.வுக்கு நல்ல வாக்குகள் கிடைத்துள்ளது.

    2026 சட்டசபை தேர்தல் களம் இளைஞர்களின் காலமாக இருக்கும். அந்த தேர்தலில் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய் என பலரும் தேர்தல் களத்தில் நிற்பார்கள். அண்ணாமலைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனை ஏற்க மறுக்கும் பா.ஜ.க.வினர், தங்களுக்கு அதிக வாக்கு கிடைக்கும் தொகுதியான கவுண்டம்பாளையத்தில் பா.ஜ.க. ஆதரவு வாக்காளர்களின் பெரும்பாலானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தங்களுக்கு பின்னடைவாக அமைந்ததாக தெரிவிக்கின்றனர்.

    இதுஒருபுறம் இருக்க பாராளுமன்ற தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு பாதகமாகவே கருதப்படுகிறது. மாவட்டத்தில் 9 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் அ.தி.மு.க. வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரனால் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

    இதுவரை கோட்டை என வர்ணிக்கப்பட்ட இடத்தில் ஓட்டை விழுந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் அ.தி.மு.க.வை வசைபாடு கிறார்கள்.

    இதேபோல நீலகிரி தொகுதியிலும் அ.தி.மு.க. 3-வது இடத்தையே பெற்றுள்ளது. இந்த தோல்வி அ.தி.மு.க. தொண்டர்களிடை யே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.
    • இன்னும் 2 ஆண்டுகளில் இதுவரை கண்டிராத திட்டங்கள் வரும்.

    கோவை:

    கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு மாநகர் மாவட்ட தி.மு.க செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு, மாவட்ட அலுவ லகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளி த்த பேட்டியில் கூறியதா வது:-

    கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஒட்டு மொத்த தமிழகமுமே கலை ஞரை கொண்டாடி வருகி றது. தமிழகத்தின் வளர்ச்சி க்கும், இந்தியாவில் ஜன நாயகம் காப்பாற்றப்படுவதற்கும் முதல் காரணம் கலைஞர் கருணாநிதி தான்.

    ஒட்டு மொத்த இந்திய அரசியலிலும் வெற்றியை மட்டுமே கண்ட தலைவர் கருணாநிதி ஆவார். இன்றைய நாளில் அவரை நாம் கொண்டாடி வருகி றோம்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுக ளில் எண்ணற்ற மகத்தான சாதனைகளையும், மக த்தான நலத்திட்டங்களையும் பொதுமக்களுக்கும், தாய்மார்களுக்கும், இளைஞர்களுக்கும் கொடுத்து வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெறும். இந்த வெற்றியை மக்கள் எங்களுக்கு கொடுப்பார்கள். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் மகத்தான வளர்ச்சியையும், பல மடங்கு அற்புதமான திட்டங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து காட்டுவார்.

    தேர்தலின் போது கொடு க்கப்பட்ட வாக்குறுதியை போல கோவை மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். சிறு, குறு தொழில்களில் பெரிய விடியல் அடுத்த கட்டமாக காத்திருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளில் இதுவரை கண்டிராத திட்டங்கள் வரும்.

    இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    • குட்டி யானை சென்றதால் தாய் யானை தவிப்புக்கு உள்ளாகி உள்ளது.
    • டிரோன் காமிரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

    வடவள்ளி:

    கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் காட்டு யானை ஒன்று கண்டறியப்பட்டது. அதனுடன் குட்டி யானையும் இருந்தது.

    உடல் நலம் பாதிக்க ப்பட்ட யானைக்கு கால்நடை மருத்துவக் குழு வினர், வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். நிற்க முடியாமல் அவதியடைந்த யானையை கிரேன் வாகனம் மூலம் தூக்கி நிறுத்தி சிகிச்சை அளித்து வந்தனர்.

    தொடர் சிகிச்சையால் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் யானை சீராக உணவும் எடுத்து வருகிறது. யானையுடன் இருக்கும் குட்டி யானையையும் வனத்துறையினர் கண்காணித்து உணவளித்து வருகின்றனர்.

    பெண் யானையின் உடல் நிலையில் முன்னே ற்றம் ஏற்பட்டுள்ளதால் அதனை வனத்திற்குள் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களாக தாய் யானையை சுற்றி, சுற்றி வந்த குட்டி யானை நேற்று திடீரென மாயமாகி விட்டது. குட்டி யானை சென்றதால் தாய் யானை தவிப்புக்கு உள்ளாகி உள்ளது.

    தாய் யானை அருகே குட்டி யானை இல்லாததால் அதிர்ச்சியான வனத்துறையினர் வனப்பகுதியில் டிரோன் காமிரா மூலம் கண்காணித்தனர். அப்போது வனப்பகுதிக்குள் மற்றொரு ஆண் யானையுடன் நின்றிருந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து குட்டி யானையை வனத்துறையினர் டிரோன் காமிரா மூலம் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    பெண் யானைக்கு மசாலா புல், ஆலை இலை, அரச இலை, பழங்கள் கொடுத்தோம். 150 முதல் 200 கிலோ வரை உணவு எடுத்துள்ளது. குட்டி யானையை 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை அழைத்து சென்றுள்ளது.

    அந்த யானையின் நடமாட்டத்தை டிரோன் காமிரா மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பெண் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை வனத்திற்குள் விட திட்டமிட்டுள்ளோம்.

    யானையின் உடல்நிலையை கண்காணிக்கவும், மற்ற யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் ட்ரேப் காமிரா பொருத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×