search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி ரத்து செய்தது.
    • விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதற்கான பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், ராஜஸ்தான் - பெங்களூரு போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏதும் இல்லை என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    மேலும், "குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 2-5 மணிவரை பயிற்சி செய்ய பெங்களூரு அணி திட்டமிட்டிருந்தது. ஆனால் கோடைக்காலம் என்பதால் மாலை 6.30 மணிவரை வெளிச்சம் இருக்கும் என்பதால் பயிற்சியை 3-6 மணிக்கு மேற்கொள்ளலாம் என்று அணி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் வெப்ப அலை காரணமாகவே பெங்களூரு அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

    அதே சமயம் குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 3.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ராஜஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டது" என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

    • இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
    • பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அடுத்த இந்திய அணி பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமிப்பதன் சாதக பாதகங்களை குறித்து மனம் திறந்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கேகேஆர் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர், ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு இந்தியாவின் அடுத்த பயிற்சியாளராக வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அடுத்த இந்திய அணி பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமிப்பதன் சாதக பாதகங்களை குறித்து மனம் திறந்துள்ளார். ஸ்போர்ட்ஸ் கீடா நிகழ்ச்சி ஒன்றில் வாசிம் பேசுகையில், கம்பீர் எளிமையாகவும் நேர்மையாகவும் இருப்பவர் அதே நேரம், அப்பட்டமாக உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக பேசக்கூடியவர், எதையும் இருமுறை யோசிக்காமல் பேசுவார்.

     

    இது இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு குணமாகும். சில நேரங்களில் ஆக்ரோஷமாகவும் இருப்பார், இந்திய பயிற்சியாளர் பதவிக்கு அவர் சிறந்தவராக இருப்பார். அவர் இந்த பதவியை ஏற்றுக்கொள்வாரா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    விவிஎஸ் லக்ஷ்மண் அல்லது ஆஷிஷ் நெஹ்ரா இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு பொருத்தமாக இருப்பார்களா என்பது குறித்தும் வாசிம் அக்ரம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தனது பபேட்டியில் அவர், நானும் வேறு சில பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது.

     

    ஆசிஷ் நெஹ்ராவை சுற்றியிருக்க அனைவரும் விரும்புவர். மேலும் லக்ஷ்மன் சிறந்த மனிதர். அவர் என்சிஏ தலைவர், 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு கைகொடுக்கும் என்று தெரிவித்துள்ளார். 

     

    • ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது பாலியல் புகார் எழுந்தது.
    • தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    காத்மண்டு:

    நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். 2022-ம் ஆண்டு ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்மீது பாலியல் புகார் எழுந்தது

    இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த காத்மண்டு நீதிமன்றம், அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

    தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் சந்தீப் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தீப் லமிச்சேனை விடுதலை செய்தது

    எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான நேபாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் சந்தீப் லமிச்சேனின் விசாவை நிறுத்தி வைத்துள்ளது.

    அமெரிக்க தூதரகத்தின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக சந்தீப் லமிச்சேன் தெரிவித்துள்ளார்.

    • வங்காளதேசம் அமெரிக்காவில் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • முதல் போட்டியில் அமெரிக்க அணி வங்காளதேசத்தை வீழ்த்தியது.

    ஹூஸ்டன்:

    வங்காளதேசம் அணி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று ஹூஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. ஹிருடோய் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். மஹமதுல்லா 31 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது. 14.5 ஓவரில் அமெரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து களமிறங்கிய கோரே ஆண்டர்சன், ஹர்மித் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், அமெரிக்க அணி 19.3 ஓவரில் 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோப்பை தங்களுடைய என்று அவர்கள் நம்புவார்கள்.
    • யாரும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது.

    ஐபிஎல் 2024 சீசன் பிளேஆஃப் சுற்றுகள் நேற்று தொடங்கியது. குவாலிபையர்-1ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    பிளேஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேறுமா? என்ற கேள்வி இருந்த நிலையில், தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆர்சிபி தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், கொல்கத்தா அணி இறுதிப் போட்டியில் ஆர்சிபியை எதிர்கொள்வதை விரும்பாது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வருண் ஆரோன் கூறியதாவது:-

    இந்தமுறை சாம்பியன் படத்தை வெல்ல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், போட்டி நடைபெறும் அன்றைய தினத்தில்தான் ரிசல்ட் முடிவு செய்யப்படும். உங்களுடைய அணி சிறந்ததா? அல்லது மோசமானதா? என்பது விசயம் அல்ல. ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு வர வேண்டும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விரும்பும் என நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்களின் உத்வேகம். ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோப்பை தங்களுடைய என்று அவர்கள் நம்புவார்கள். யாரும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது.

    இன்னும் முக்கியமான போட்டிகள் உள்ளன. இறுதிப் போட்டிக்கான நெருக்கடி முற்றிலும் மாறுபட்டது. இறுதிப் போட்டிக்கு முன்னேறுவரை கொல்கத்தா விரும்பாது. ஏனென்றால், ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற விருபத்துடன் விளையாடி வருகின்றனர்.

    இவ்வாறு வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.

    • 14 இன்னிங்சில் 308 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
    • இரண்டு அரைசதங்களுடன் 25.66 மட்டுமே சராசரி வைத்துள்ளார்.

    ஐபிஎல் 2024 சீசனின் பிளேஆஃப் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. நேற்று நடைபெற்ற குவாலிபையர்-1ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தோல்வியடையும் அணி வெளியேறும். இதனால் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் விறுவிறுப்பில் பஞ்சம் இருக்காது.

    ஆர்சிபி அணி முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 14 போட்டிகளில் விளையாடி 708 ரன்கள் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக கெய்க்வாட் 583 ரன்கள் எடுத்துள்ளார்.

    விராட் கோலி லீக் ஆட்டங்களில் அபாரமாக விளையாடினாலும் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் அவரது ஸ்டிரைக் ரேட் மற்றும் ரன்விகிதம் அதிகமாக இருந்ததில்லை.

    இதுவரை 14 பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாடி 308 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். சராசரி 25.66 ஆகும். ஸ்டிரைக் ரேட் 120.31 ஆகும்.

    தொடர்ச்சியான ஆறு போட்டிகளில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் ஆர்சிபி எலிமினேட்டர் சுற்றில் களம் இறங்குகிறது. இதனால் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இதனை மனதில் வைத்து இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பாக விளையாடி முந்தைய சறுக்கலில் இருந்து மீண்டு வந்து அணிக்கு தூணாக நிற்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். விராட் கோலியும் அதே நிலையுடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

    • பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதனால் பயிற்சி ஆட்டத்தை ஆர்சிபி ரத்து செய்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதற்கான பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

    ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி நேற்று ரத்து செய்தது. மேலும், செய்தியாளர் சந்திப்பையும் ரத்து செய்துள்ளது.

    கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

    விராட் கோலி அகமதாபாத்திற்கு வந்த பிறகு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதைப் பற்றி அறிந்தார். அவர் ஒரு தேசிய பொக்கிஷம், அவருடைய பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை என போலீசார் தெரிவித்தனர். அகமதாபாத்தில் உள்ள இரு அணி விடுதிகளுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

    • பெங்களூரு அணி கடைசி 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டது.
    • முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்று கம்பீரமாக காட்சியளித்தது ராஜஸ்தான் அணி.

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

    அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ், 4-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது.

    இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.

    ஒருபக்கம் முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்று கம்பீரமாக காட்சியளித்த அந்த ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் வரிசையாக 4-ல் தோற்று புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தையே பிடித்தது.

    மறுபக்கம் இதுவரை கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி தனது முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த அணியின் கதை முடிந்தது என்று எல்லோரும் நினைத்த போது, அந்த அணி கடைசி 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டது. அதுவும் முந்தைய திரில்லிங்கான ஆட்டத்தில் 27 ரன் வித்தியாசத்தில் சென்னையை வெளியேற்றி சிலிர்க்க வைத்தது.

    பெங்களூரு அணியின் இந்த எழுச்சியை முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்து பேசியுள்ளார்.

    "இந்த ஐபிஎல் தொடரில் தோல்வியிலிருந்து மீண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று பெங்களூரு அணி நம்பியதே அற்புதமான விஷயம். தொடர் தோல்வியினால் அணியின் வீரர்கள் நம்பிக்கையை இழந்திருக்கலாம். ஆனால் அணியில் உள்ள மூத்த வீரர்களான விராட் கோலி, டு பிளசிஸ் ஆகியோர் மற்ற அணி வீரர்களை ஊக்கப்படுத்தி சிறப்பாக அணியை வழிநடத்தியுள்ளனர். அதுவும் இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்ற வீரர்களை ஊக்கப்படுத்தியுள்ளனர்" என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    மேலும், "தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ராஜஸ்தான் அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் பெங்களூரு அணியை வெல்ல முடியும். இல்லையென்றால் குவாலிபையர் 1-ல் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி எளிதாக வென்றது போல ராஜஸ்தான் அணியை பெங்களூரு எளிதாக வென்று விடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் தொடர்பாக சுனில் கவாஸ்கர் கிண்டலாக கமெண்ட் அடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்சிபி மற்றும் விராட் கோலியை தேர்வு செய்யும்போது இதைவிட சிறந்த தேர்வு இருக்க முடியாது என உள்ளுணர்வு சொன்னது.
    • தற்போது ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என உள்ளுணர்வு சொல்கிறது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது விஜய் மல்லையா ஆர்சிபி அணியை ஏலத்தில் எடுத்தார். அதேபோல் விராட் கோலியையும் ஏலத்தில் எடுத்தார்.

    இதுவரை ஆர்சிபி அணி மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மூன்று முறையும் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்துள்ளது.

    இந்த சீசனில் முதல் எட்டு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் அதாவது ஆறு போட்டிகளிலும் வெற்றிபெற்று, சென்னை அணிக்கெதிராக ரன்ரேட்டி அடிப்படையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இதேஉத்வேகத்துடன் சென்றால் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் மல்லையா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் ஆர்சிபி அணியை எடுப்பதற்காகவும், விராட் கோலியை எடுப்பதற்காகவும் ஏலம் கோரியபோது, என்னுடைய உள்ளுணர்வு என்னிடம், நான் அதைவிட சிறந்த தேர்வை தேர்வு செய்திருக்க முடியாது எனச் சொன்னது.

    அதேபோல் தற்போது என்னுடைய உள்ளுணர்வு, இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல ஆர்சிபி-க்கு சிறந்த வாய்ப்பு என என்னிடம் சொல்கிறது. முன்னோக்கி, மேல்நோக்கி செல்ல பெஸ்ட் ஆஃப் லக்..

    இவ்வாறு விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

    • இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைக் தேர்ந்தெடுப்பது சவாலானதாக மாறியுள்ளது.
    • பிசிசிஐயின் விருப்பப்பட்டியலில் கம்பீர் தற்போது முதலிடத்தில் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைக் தேர்ந்தெடுப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிசிஐ) சவாலானதாக மாறியுள்ளது. விண்ணப்பங்களுக்கான காலக்கெடு வரும் மே 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த பதவிக்கு கௌதம் கம்பீர் (கேகேஆர் அணியின் பயிற்சியாளர்), ஸ்டீபன் ஃப்ளெமிங் (சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சியாளர்), ஜஸ்டின் லாங்கர் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர்) மற்றும் ஸ்ரீலங்கா அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே ( மும்பை இந்தியன்ஸின் செயல்திறன் தலைவர்) ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.

    அனைவரும் அதிக லாபம் அளிக்கும் ஐபிஎல் தொடர் சம்பந்தமான வேலைகளில் பிசியாக உள்ளதால் அடுத்த 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரை ஆண்டுக்கு 10 மாதங்கள் அணியுடன் பயணிக்கக்கூடிய வலுவான ஒரு பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருகிறது.

    ஐபிஎல் வேலையில் ஈடுபடாதவர் தற்போதைய என்சிஏ தலைவர் விவிஎஸ் லட்சுமண் மட்டுமே. லக்ஷ்மண் பயிற்சியாளர் பணியை ஏற்க தயக்கம் காட்டிவருவதாக தெரிகிறது. மேலும் தற்போது பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுடன் பேசவும், அவர்கள் வேலையில் ஆர்வமாக உள்ளனரா எனச் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.

     

    பிசிசிஐயின் விருப்பப்பட்டியலில் கம்பீர் தற்போது முதலிடத்தில் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் மூத்த வீரர்களும் கம்பீரும் சமீப காலமாக நன்றாகப் பழகி வருவதாகத் தெரிகிறது. கேகேஆர் அணியுடன் அகமதாபாத்தில் உள்ள கம்பீருடன் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று கூறப்படுகிறது. கடைசியாக ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • கொல்கத்தா தரப்பில் ஷ்ரேயாஸ் மற்றும் வெங்கடேஷ் அரை சதம் அடித்து அசத்தினர்.
    • ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் நடராஜன் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

    நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 19.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக ராகுல் திரிபாதி 55 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ்- நரைன் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்தது. 23 ரன்னிலும் நரைன் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து வெங்கடேஷ் மற்றும் ஷ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். மேலும் அணியையும் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    இதனால் கொல்கத்தா அணி 13.4 ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் நடராஜன் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

    • அன்றிலிருந்து யாருடைய காலையும் எப்போதும் தொடுவதில்லை என்று நான் எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன்.
    • அதே போல வேறு யாரும் என்னுடைய காலை தொட விடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

    நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் 75 ரன்கள் அடித்த அவர் டோனி தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார். அதே போல 2011 உலகக் கோப்பை இறுதி போட்டியில் சுயநலமின்றி 97 ரன்கள் அடித்த அவர் 28 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பை முத்தமிட உதவினார்.

    மேலும் கொல்கத்தா அணிக்காக 2012, 2014 வருடங்களில் கோப்பையை வென்ற அவர் 3-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். ஓய்வுக்கு பின் அதிரடியான கருத்துக்களை தைரியமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ள அவர் தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் வெற்றிகரமான பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில் தனது இளம் வயதில் அண்டர்-14 அணியில் விளையாடுவதற்காக தேர்வாளரின் காலில் விழ சொன்னதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது அவர் கூறியதாவது:-

    நான் வளரும் போது 12, 13 வயதில் என்னுடைய முதல் அண்டர்-14 தொடர் வந்தது நினைவிருக்கிறது. அந்தத் தொடரில் தேர்வாளரின் காலை நான் தொடாததால் விளையாடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அன்றிலிருந்து யாருடைய காலையும் எப்போதும் தொடுவதில்லை என்று நான் எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன். அதே போல வேறு யாரும் என்னுடைய காலை தொட விடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

    அண்டர்-16, அண்டர்-19, ரஞ்சிக் கோப்பை அல்லது என்னுடைய சர்வதேச கேரியரின் ஆரம்பத்தில் ஒவ்வொரு முறையும் நான் தோல்வியடையும் போது கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையற்ற குடும்பத்திலிருந்து நீங்கள் வந்துள்ளீர்கள் என்று பலரும் விமர்சித்தார்கள். அத்துடன் நீங்கள் உங்களுடைய அப்பாவின் தொழிலுக்கு சென்று விடுங்கள் என்று சொன்னார்கள். அது தான் என் தலை மீது தொங்கிய மிகப்பெரிய கருத்து.

    ஆனால் நான் அவர்களை விட அதிகமாக விரும்புகிறேன் என்பதை மக்கள் உணரவில்லை. நான் அந்த உணர்வை வெல்ல விரும்பினேன். அதை என்னால் செய்ய முடிந்த போது வேறு எந்த பார்வையும் என்னை தொந்தரவு செய்யவில்லை. என் வாழ்க்கையில் வெல்ல மிகவும் கடினமான கருத்து என்னவென்றால் அதை நான் கடினமாக விரும்பவில்லை. நான் அவர்களை விட கடினமாக இருக்க விரும்பினேன்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    ×